சென்னை, ஜூலை 21- காவிரி ஆற்றில் மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் தர்மபுரியில் நடைபெற்று வருகிறது. இக் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப் பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முதல் நாளான ஜூலை 21 அன்று கீழ்க்கண்ட தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. காவிரி ஆற்றில் தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள மேகதாதுவில் புதிய அணையக் கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கர்நாடகத்திலும், ஒன்றியத்திலும் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சிப்பொறுப் பில் உள்ள சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு சட்டத்திற்கு புறம்பாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரூ. 9 ஆயிரம் கோடியில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரை நிலைமை சென்று விட்டதை சுட்டிக் காட்டுகிறோம். எனவே தான் மேகதாது தொடர் பான விவாதத்தை காவிரி மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளும் என்று அதன் தலைவர் அறிவிப்பு வெளியிட்டதை அத்து மீறிய நடவடிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டித்ததை நினைவுபடுத்து கிறோம். தமிழக அரசும் ஆணையத்தின் நடவ டிக்கையை கண்டித்ததோடு, உச்சநீதிமன்றத் திலும் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசார ணையின் போது, மேகதாது அணை கட்டுவது குறித்து எந்த விவாதமோ, முடிவோ ஆணை யம் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியதோடு வரும் 26 ஆம் தேதி அறிக்கை அளித்திட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. எனவே, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு முரணாக தொடர்ந்து செயல்பட்டு வரும் கர்நாடக அரசு, காவிரியில் தமிழ கத்தின் பாசன உரிமையை மறுத்து உபரி நீரை மட்டும் பயன்படுத்தும் மாநிலமாக மாற்ற முயற்சிக்கிறது. கனமழை காலத்தில் வரும் உபரி நீரையும் தடுக்கும் வகையில் தான் மேகதாதுவில் புதிய அணையை கட்ட கர் நாடக அரசு முயற்சிக்கிறது. இதற்கு ஒன்றிய அரசு துணை போகாமல் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகிய வற்றின் இறுதி தீர்ப்பின் படி தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை பாதுகாத்திட வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்துவதோடு, காவிரியின் மேகதாதுவில் அணை கட்டுவதை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.