அழிவின் விளிம்பில் கரியசல்லி தீவு
தீவைக் காப்பாற்றும் முயற்சியில் தமிழ்நாடு அரசு
சென்னை, மே 14- மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்காவில் உள்ள மொத்தம் 21 தீவு கள் உள்ளன. இதில் கரியசல்லி தீவும் ஒன்று ஆகும். இந்த கரியசல்லி தீவு கடலரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் தனது பரப்பளவை வெகுவாக இழந்து வருகிறது. 1969இல் 20.85 ஹெக்டேர் பரப்பளவை கொண்ட கரியசல்லி தீவு, 2018இல் வெறும் 5.97 ஹெக்டேராக சுருங்கி விட்டது. அதாவது மொத்த நிலப்பரப்பில் 71% அதிகமாக இழந்துள்ளது. கடல் அரிப்பு போக்குகள் தொடர்ந்தால், 2036ஆம் ஆண்டுக்குள் கரியசல்லி தீவு முற்றிலும் மறைந்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், கரியசல்லி தீவை காப்பாற்ற தமிழ்நாடு அரசு உலக வங்கி யின் உதவியுடன் 50 கோடி ரூபாய் மதிப்பிலான மீட்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு கடற்கரை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்து தல் முயற்சியின் கீழ் கரியசல்லி தீவைக் காப்பாற்றும் பணிகளை தொடங்கியுள்ளது.
செயற்கை பவளப் பாறைகள்
கரியசல்லி தீவைக் காப்பாற் றும் பணியில் மிக முக்கியமானது ஐஐடி சென்னை வடிவமைத்த 8,500 பல்நோக்கு செயற்கை பவளப் பாறை கள் தீவைச் சுற்றி பொருத்தப்படுவது ஆகும். இந்த பவளப் பாறைகள் 2 முதல் 3 மீட்டர் உயரமும், 1.8 முதல் 3 டன் எடையும் கொண்டவை. இவை அலைகளின் வேகத்தைக் குறைத்து, மண் படிவதை ஊக்குவிக்கும். மேலும், கடல் உயிரினங்களுக்கு புதிய வாழ்விடமாகவும் மாறும்.செயற்கை பவளப் பாறைகள் பொறுத்தப்பட்டாலே கரியசல்லி தீவை திடமாக காப்பாற்றிவிடலாம் என நிபுணர்கள் உறுதியாக கூறுகின்றனர்.
நம்பிக்கை அளிக்கும் வான் தீவு
இதற்கு முன் அழிவின் விளிம்பில் சிக்கிய வான் தீவில் 10,000க்கும் மேற்பட்ட செயற்கை பவளப் பாறை கள் பொருத்தப்பட்டன. இதனால் வான் தீவு அழிவின் விளிம்பில் இருந்து தப்பியது. நிலப்பரப்பு நன்றாக அதிகரித்தது. இதே போல கரியசல்லி தீவின் கடல் பகுதியிலும் பவளப் பாறைகள் மீட்கப்பட்டு, 37 வகையான பவளங்கள் வளர்ந்துள் ளன என செய்திகள் வெளியாகி யுள்ளன. கரியசல்லி தீவு மீட்பு பணி தொடர்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா ளர் சுப்ரியா சாஹு கூறுகையில், “கடல் அரிப்பு கட்டுப்பாட்டுக்கு இணை யாக, கரியசல்லி தீவுக்கு அருகில் உள்ள முறையே 2 ஏக்கர் மற்றும் 3 ஏக்கர் பரப்பளவில் சீரழிந்த பவளப் பாறைகள் மற்றும் புல் கடல் படுகை கள் மறுசீரமைப்பு நுட்பங்கள் மூலம் மறுசீரமைக்கப்படுகின்றன. இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் கடல் மான், கடல் ஆமை போன்ற உயிரி னங்களை ஆதரிக்கின்றன. மேலும் கார்பன் பிரித்தெடுப்பிற்கு பங்க ளிக்கின்றன. குறிப்பாக கரையோரங் களைப் பாதுகாக்கின்றன. இந்த திட்டத்தின் சுற்றுச்சூழல் முயற்சிகள் கடல் ஆதாரங்களை மேலும் மேம் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள் ளது. மன்னார் வளைகுடா ஒரு செழிப் பான கடல் வாழ்விடமாக இருப்பதை உறுதி செய்கிறது. கரியசல்லி தீவைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், மன் னார் வளைகுடாவின் சுற்றுச்சூழல் சம நிலையை பேணுவதே நமது இலக்கு” என அவர் கூறினார். தமிழ்நாடு அரசின் கரியசல்லி தீவைக் காப்பாற்றும் திட்டம் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் மீனவ சமூ கத்தின் வாழ்வாதாரமும் உறுதிப் படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது. அதாவது கரியசல்லி தீவின் 10 கி.மீ சுற்றளவில் உள்ள வைப்பார், சிப்பிகுளம் மற்றும் பட்டினமருதூர் போன்ற கடலோர கிராமங்கள் பயன டைய உள்ளதால், இந்த சமூக ஈடு பாடு திட்டத்தின் ஒரு மூலக்கல்லாகும்.