சென்னை, ஜன.27- பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் “அரசமைப்புச் சட்டத் தையும் நாடாளுமன்ற ஜனநாயகத் தையும் காத்திடுவோம், தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை மசோதாவிற்குக் குடியரசுத் தலை வர் ஒப்புதல் வழங்கிட வலியுறுத்து வோம்” என்ற தலைப்பில் குடியரசு தின கருத்தரங்கம் சென்னையில் வியாழ னன்று (ஜன. 26) நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பி னர் கனிமொழி கலந்து கொண்டு “ஜன நாயகத்தைக் காக்க ஒன்றிணை வோம்” என்ற தலைப்பில் பேசுகை யில், அரசியலமைப்பு சட்டம் குறித்து குடியரசு துணைத்தலைவர் அண்மை யில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அது அவர் சார்ந்து இருக்கக் கூடிய வர்களுக்கு மிகவும் முக்கியமான கருத்து. அவர்கள் அடிப்படையில் அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் எனத் துடித்துக் கொண்டி ருக்கிறார்கள் என்றார்.
உரிமைகள் பறிப்பு
1973ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பு வெளி யானது. அதில் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு களை யாரும் மாற்றக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று அந்த தீர்ப்பைக் கேள்விக்குள் ளாக்கும் வகையில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியவரே பேசு வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசி யல் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய தன் அவசியத்தை ஒவ்வொருவரும் உணர வேண்டும். நமது உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்படுகிறது.
பேச அனுமதியுங்கள்
பிபிசி வெளியிட்டுள்ள ஒரு படத் தைப் பார்ப்பதற்கு மாணவர்களுக்கு உரிமை இல்லை எனக் கூறி தடை செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் எதையும் யாரும் தடுக்க முடியாது. மாணவர்கள் அனைத்து பல்கலைக்கழக, கல்லூரி வளாகத்திலும் அதைத் திரையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருவேறு மாறுபட்ட கருத்துடையவர்கள் இந்த சமூகத்தில் வாழ உரிமை உண்டு. ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையே பேச அனுமதிப்பது தான். எத்தனையோ போராட்டங்களைக் கடந்துதான் பெண்கள் படிக்கும் சூழல் உருவானது. ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் போதுதான் ஜனநாயகத்தில் மாற்றம் ஏற்படும். ஆனால் இன்று செய்தித் தாள்களிலே, தொலைக்காட்சியிலே அது குறித்து விவாதிக்கக் கூடாது. திரைப்படம் எடுக்கக் கூடாது, பொது வெளியில் பேசக் கூடாது என்கின்ற னர். எந்தவித கருத்து பரிமாற்றமோ, எதிர்க்கருத்தோ இல்லாத சூழலில் தான், சொல்லுவது மட்டுமே நியாயம் என்ற நிலையை உருவாக்கும்போது, ஜனநாயகம், சுதந்திரம் என்ற வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தமே இல்லாத சூழல் உருவாகி விடுகிறது. வழிபாட்டு உரிமை, உணவு உரிமை, உடை உரிமை என அனைத்து உரி மைகளும் பறிக்கப்படுகிறது. யாரை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற உரிமை மக்களுக்கு இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மாற்றுகிறார்கள். சரிபாதி யாக உள்ள பெண்களுக்கு சம உரிமை கிடையாது என அனைத்தை யும் மறுக்கும் இந்த அரசு அரசியல் அமைப்பு சட்டத்தையும் ஜனநாய கத்தையும் பாதுகாக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் யாருடைய கருத்துக்களையும் கூற அனு மதிப்பதில்லை. எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் போதே, பல மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டி யலுக்கு கொடுத்து விடுங்கள். எங்கள் குழந்தைகளுக்கு என்ன கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எங்க ளுக்குத் தெரியும். தமிழ்நாட்டிலிருந்து யாரையும் அழைக்காமல் காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்தினர். கடந்த 8 ஆண்டுகளில், தமிழுக்கு ஒன்றிய அரசு செலவழித்துள்ள தொகை 74 கோடி ரூபாய் மட்டுமே என்பதைச் சுட்டிக் காட்டினார். இப்படிப்பட்ட அரசு சூழலில் தற்போதுள்ள ஒன்றிய அரசு தொடர வேண்டுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இதை மற்ற மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். நாளைய சமூகம், கேள்வி கேட்கக் கூடிய, சமூக அக்கறை கொண்ட சமூகமாக மாற வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள் வோம் என்றும் அவர் கூறினார். தலைவர் ப.ரத்தினசபாபதி தலை மையில் நடைபெற்ற கருத்தரங்கில், மக்களவை உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் “நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு உருவாகிவரும் சவால்கள்” என்ற தலைப்பிலும், மத்தியக் கல்வி ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் பேராசிரி யர் அனில் சட்கோபால் “நீட் கியூட் மற்றும் அன்னிய பல்கலைக்கழகங்க ளுக்கு அனுமதி சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்” என்ற தலைப்பிலும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறி ஞர் பு.பா.சுரேஷ்பாபு “அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடு களை, இந்தியா என்ற கோட்பாட்டை வரையறுக்கிறது” என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினர். முன்னதாக பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்தரங்கின் நோக்கம் குறித்துப் பேசினார்.