tamilnadu

img

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் கலைஞர் பல்கலைக்கழகம் தற்காலிகமாக துவங்கப்படும்

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில்  கலைஞர் பல்கலைக்கழகம் தற்காலிகமாக துவங்கப்படும்

அமைச்சர் கோவி. செழியன் தகவல்

கும்பகோணம், மே 2-  தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பல்கலைக்கழகம் கும்பகோணத்தில் துவங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். இதை அடுத்து கும்பகோணத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் கும்பகோணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பல்கலைக்கழகம் புதிதாக துவங்கப்படும் என அறிவித்ததை அடுத்து, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பல்கலைக்கழகம் வரலாற்று சிறப்புமிக்க கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் ஒரு பகுதியாக விளங்கும் விக்டோரியா கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கும். மேலும், நிரந்தரமாக பல்கலைக்கழகம் கட்டுவதற்கான இடம் கும்பகோணம் அருகே உள்ள கள்ளபுலியூரில் சுமார் 60 ஏக்கர் இடமும், அதேபோல், கும்பகோணம் அருகே சாக்கோட்டை நீடாமங்கலம் சாலையில் 50 ஏக்கர் இடமும் இருப்பதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் இடத்திற்கான கள சூழல் உட்பட அதன் முழு விவரம் அனைத்தையும் அறிக்கையாக அரசுக்கு தெரிவிக்கும்போது, அதனை உறுதி செய்து, ஜூன் மாதம் தஞ்சைக்கு வருகை தரும் தமிழக முதல்வர், அடிக்கல் நாட்டி துவக்கி வைப்பார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.