tamilnadu

img

சனாதன சக்திகளை ஒன்றிணைந்து வீழ்த்துவோம்!

சென்னை, டிச. 3- 2024 மக்களவை தேர்தலில் சனாதன சக்திகளை வீழ்த்து வோம், சமூக நீதி கொள்கைகளை முன்னெடுப்போம், மதச்சார்பின் மையைப் பாதுகாப்போம் என ஆசிரியர் கி.வீரமணி பிறந்த நாள் விழாவில் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 90ஆவது பிறந்த நாள் விழா சென்னையில்  வெள்ளியன்று (டிச. 2) நடைபெற்றது. திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழன் அடிமை தவிர்த்து குன்றென நிமிர்தல் வேண்டும் என்ற பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக் கருதிய  வீரமணியை வீண் செயல் எதுவும் வீழ்த்தவில்லை என்பதை விட, வீணர்கள் எவராலும் அவரை வீழ்த்த  முடியவில்லை என்பதன் அடையாளம் தான் இந்த 90ஆம் ஆண்டு பிறந்தநாள்  விழா என்றார்.

திமுக மீது, இந்த ஆட்சி மீது அரசி யல் எதிரிகள் விமர்சனத் தாக்குதல் நடத்தினால், எங்களுக்கு முன்னால் அதனைத் தடுக்கக்கூடிய கேடயமாக விளங்கிக் கொண்டிருப்பவர் ஆசிரியர். எதிரிகள் மீது கொள்கை அம்பு பாய்ச்சும் சொல் வீச்சுக்காரராக செயல்படுபவர்தான் ஆசிரியர். நாட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்சி னைகளுக்கும் சுயமரியாதைச் சுடரொளி காட்டி வழிகாட்டுபவராக ஆசிரியர் செயல்பட்டு வருகிறார். பகுத் தறிவாளராக அவர் இருப்பதால் தான் 90 வயதிலும் இளமையோடும், கொள்கைப் பிடிப்போடும் இருக்கிறார்.   சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை, மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவம், இன உரிமை, மொழிப்பற்று ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய திரா விடக் கொள்கையின் அடையாள மாக ஆசிரியர் விளங்கிக் கொண்டி ருக்கிறார். இத்தகைய பெருமைக் குரிய இயக்கத்தை வழிநடத்தும் ஆசிரியர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நான் திமுக சார்பில் வாழ்த்துகிறேன் என்றார்.

கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பேசுகையில், 90 வயதிலும் ஆசிரியர் இவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார் என்றால் அதற்குக் காரணம் அவர் ஏற்றுக்  கொண்ட தத்துவம்தான் என்றார்.  வாழ்நாள் முழுவதும் சனாதனத்தை  எதிர்த்த தத்துவப் போராட்டத்தின் வீரராகத் திகழ்ந்து கொண்டிருக் கிறார். 10 வயதிலே மேடை ஏறிய  சாதனையாளர். தோழர் ெஜயராம னும், ஆசிரியர் வீரமணியும் ஒரே ஊரில் பிறந்து தமிழகத்திலே வாழும்  இரண்டு ஆளுமைகளாகத் திகழ்கிறார் கள் என்றார்.

பொசுக்கும் நெருப்பு

பொதுக்கூட்டங்களில் கூட பல நூல்களைக் கையில் வைத்துக் கொண்டு மிக நுணுக்கமாகப் பேசக்  கூடியவர். படிப்பறிவு இல்லாதவர்கள் கூட அரசியல் சாசனத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகப் பேசக் கூடியவர். பெரியாரின் லட்சியத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார். இடதுசாரி இயக்கங்களுக்கும், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திராவிட இயக்கத்திற்கும் தொடர்பு உண்டு. 1924ஆம் ஆண்டு தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய பிறகு, அவரோடு இணைந்து பணி யாற்றியவர்கள்தான் சிங்கார வேலரும், ஜீவாவும். பெரியார், சிங்காரவேலர், ஜீவா இவர்கள் இணைந்துதான் பகுத்தறிவு பிரச்சாரத்தை மட்டுமல்லாமல் சம தர்ம பிரச்சாரத்தையும் மேற் கொண்டனர். பெரியார் ஈரோட்டில் தொடங்கி வைத்த அந்த நெருப்பு இன்று சனாதன சக்திகள் தமிழகத் திற்கு உள்ளே நுழைய விடாமல் தடைக்கல்லாக உள்ளது. 1951ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தில் இட ஒதுக்கீடு இல்லை  என்ற போது, பெரியார் அனைத்துக்  கட்சி கூட்டத்தைக் கூட்டி தமிழகத் திலே மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி, அரசியல் சாசனத்திலே சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளச் செய்தார். 1952ஆம் ஆண்டு நடை பெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி அதிக  இடங்களைப் பிடிப்பதற்கு உறுதுணை யாக இருந்தவர் தந்தை பெரியார் என்றும் அவர் கூறினார்.

மநு அநீதியை அழித்தொழிப்போம்

திராவிடர் கழகம், பொதுவுடைமை இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் இணைந்து பெரியாரின் பெண் அடிமைத்தனத்தை ஒழித்துக் கட்டும் பணியில், சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கு முடிவு கட்டும் பணியில் ஈடுபட வேண்டும். ஒன்றிய பாஜக அரசு சனாதன ஆட்சியை இந்தி யாவில் நிலைநிறுத்த முயற்சிக்கிறது. அரசியல் சட்ட விழுமியங்களை எல்லாம் தூக்கி எரிந்து விட்டு, மநு ஸ்மிருதியின் ஆட்சியை நடை முறைப்படுத்தத் துடித்துக் கொண்டி ருக்கிறார்கள். தேசத்தைப் பாதுகாக்க மதச்சார்பற்ற மாண்பைத் தூக்கி நிறுத்த, அரசியல் விழுமியங்களைப் பாதுகாக்க, மநுஸ்மிருதி என்னும் மநு அநீதியை அழித்தொழிக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.

நாட்டின் எதிர்காலம் 

இந்தியாவின் எதிர்காலம் 2024  தேர்தலின் வெற்றியை பொறுத்துத் தான் இருக்கப் போகிறது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 75 ஆண் டுக்கால இந்தியாவின் பண்பாடு, கலாச்சாரம், மொழி, அரசியல் சாச னம், மதச்சார்பின்மை அனைத்தும் சீரழிக்கப்படும். கிமு, கிபி என்பதைப் போல, 2024க்கு முன், 2024க்கு பின்  என்ற நிலை உருவாகக் கூடிய ஆபத்து  உள்ளது. எனவே மதச்சார்பற்ற சக்திகளை நாடு முழுவதும் அணி திரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட் டுள்ளது. அந்த கடமையை நிறை வேற்றும் பணியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்போம் என பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய முஸ்லீம் லீக் தேசிய தலைவர்  கே.எம்.காதர்மொகிதீன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, விசிக தலைவர் தொல். திருமாவளவன், சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோரும் பேசி னர். முன்னதாக திராவிடர் கழக பொரு ளாளர் வீ.குமரேசன் வரவேற்றார். துணைப் பொதுச்செயலாளர் ச.இன் பக்கனி நன்றி கூறினார்.