புதுக்கோட்டை, ஜூன் 11- தொடர்ந்து தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன். புதுக்கோட்டையில் ஞாயிற்றுக் கிழமையன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீது எவ்வளவு விமர்சனங்களை வைத் தாலும் சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சட்ட வரம்புகளை மீறி செயல்பட்டு வருகிறார். கொடைக்கானலில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசின் கொள்கைகளை மறுத்து தேசியக் கல்விக்கொள்கை தான் சிறந்தது என்றும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்ற முதல்வரின் செயலை அவமதிக்கும் விதமாக தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் செயல்பாடு களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் பேசி வருகிறார்.
ஆளுநரின் செயல்பாடு களைக் கண்டித்தும், அவரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்த லில் தமிழ்நாட்டில் 25 இடங்களை பிடிப் போம் என்று அமித்ஷா சொல்வது வேடிக்கையான கற்பனை. 2024 தேர்தலில் அவர்களால் ஆட்சிக்கே வரமுடியாது என்ற நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் என்ற அவரது கருத்தைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. வருகின்ற 23-ஆம் தேதி நடைபெறவுள்ள எதிர்க்கட்சி களின் கூட்டத்திலேயே வரும் நாடாளு மன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விடும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் நாட்டில் அரசியல் சட்டம் இருக்காது, பத்திரிகை சுதந்தி ரம் இருக்காது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்ற நோக்கத்தோடு அடுத்து தேர்தலே வராது என்ற சூழல் உருவாக்கப்படும்.
குஜராத்தில், உத்தரப் பிர தேசத்தில் பல மருத்துவமனைகளில் ஐசியு வார்டுகளில்கூட மின்சாரம் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களைவிட உணவு, கல்வி, மருந்து, வேலை வாய்ப்பு, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தமிழ்நாடு முன் னிலையில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு இருட்டில் இருப்பதாக அமித்ஷா சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?. மக்கள் வேண்டாம் என்று சொல்கிற சேலம் எட்டு வழிச்சாலை க்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கும் ஒன்றிய அரசு, எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு மட்டும் ஏன் நிதி ஒதுக்கவில்லை; வட மாநிலங்களுக்கு மட்டும் ஒன்றிய அரசு நிதி வழங்கிவிட்டு, மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் ஜப்பான் நிறுவனத்திடம் ஏன் ஒப்படைக்க வேண்டும்? பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும்போது அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றே திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தலித் மக்களை சாமி கும்பிட அனுமதி மறுத்ததற்காக கோவிலை பூட்டிய நடவடிக்கை தற்காலிக தீர்வாக இருக்கலாம். பட்டி யலின மக்களை கோவிலுக்கு உள்ளே அனுமதிப்பதுதான் நிரந்தர தீர்வாக இருக்க முடியும். வணிக நிறு வனங்களுக்கும் உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடந்த ஆட்சியை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.