tamilnadu

img

நில வகைமாற்றம் செய்வதில் மாநில அரசின் உரிமை பறிப்பு

மக்கள் ஆதரவு அவசியம் என்பதை உணர்வீர்!

மாநில அரசுகளை முடக்கும் வேலைகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது. பாஜக தமிழகத்திற்குள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் திமுக-வை ஆதரிக்கின்றன. தமிழகத்தில் பாஜக வளர்வது  நல்லதல்ல; கூட்டணி வைப்பவர்களையே விழுங்கிவிடும் என்று எச்சரித்து வந்தோம்.  அதை அதிமுக, பாமக போன்ற கட்சிகள் கேட்கவில்லை. அவர்களை அரவணைத்து  விழுங்குகிற வேலையை பாஜக செய்து வருகிறது. எனவே, அதிமுக தலைவர்கள் அலறுகிறார்கள். அதிமுகவின் எதிர்காலம்  கேள்விக்குறியாகி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர்கள் பாஜக-வில் சேர்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் கூறுகிறார். இதன்தொடர்ச்சியாக  திமுக-விற்கு பாஜக ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்திலிருந்து திமுக தன்னை பாதுகாத்துக் கொள்ள மக்கள் ஆதரவு தேவை. எனவே, குடியிருப்புகளை இடிப்பதை திமுக அரசு கைவிடுவது அவசியம்.

 சென்னை, ஜூன் 3 - குடியிருப்பு விவகாரத்தில் மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடுக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வலியறுத்தினார். பயன்பாடற்ற நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், கோவில் நிலங் களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வலியுறுத்தி வியாழனன்று மாலை (ஜூன் 2) தாம்பரத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ் வுரிமை கோரிக்கை மாநாடு நடை பெற்றது. இந்த மாநாட்டில் கே.பால கிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு:

அரசு கட்டுப்பாட்டில்தான் அதிகாரிகள் உள்ளார்களா?

குடியிருப்புகள் இடிப்பு விவகா ரத்தில் சென்னை மாநகரை அதிகாரி களும், காவல்துறையும் போர்க்களம் போல மாற்றி வருகிறார்கள். உச்சநீதி மன்ற தீர்ப்பு என்பதற்காக அல்ல; முத லமைச்சர், அமைச்சர்களும் கூறிய பிறகும் திமுக அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடே அதிகாரி கள்  செயல்படுவதாக தெரிகிறது. எனவே அதிகாரிகளும், காவல்துறை யினரும் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது. தொழிலாளர்கள் நலன் சார்ந்த நீதிமன்ற தீர்ப்புகளை தொழில் நிறு வனங்கள் அமல்படுத்துவதில்லை. அங்கெல்லாம் அதிகாரிகள் தலையிடு வதில்லை. 50 ஆண்டுகளாக குடி யிருந்து, அடுக்குமாடி வீடுகள் கட்டு கின்றனர். அந்த குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு, இருப்பிடச் சான்று கொடுத்து, வரியையும் அதிகாரிகள் வசூ லிக்கின்றனர். பிறகு எப்படி அந்த இடம் நீர்நிலையாகும்? இந்த அடிப்படை புரிதல் கூட இன்றி உத்தரவிடலாமா? நீதி மன்றத்தில் உரிய ஆவணங்களை சமர்ப் பிக்காமல் அதிகாரிகள் தவறு செய்து விட்டு, மக்களை தண்டிக்கலாமா?

ஏரி என்பதில் நியாயம் உள்ளதா?

மாநகராட்சிப் பகுதிகளில் விவசாய நிலம் இல்லை; விவசாயமும் நடை பெறவில்லை.  பயன்பாட்டை இழந்த  பகுதிகள் குடியிருப்புகளாக, நகரங் களாக மாறி நிற்கின்றன. அந்த இடத்தை இப்போது ஏரி என்று சொல்வதில் நியாயம் உள்ளதா?அதிகாரிகளுக்கு ஏரிக்குள்ளேயே ‘ஏரி ஸ்கீம்’ என்று பெய ரிட்டு அடுக்குமாடிகளை கட்டியுள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர்கள், நீதிபதிகளின் குடியிருப்புகள் கரையை ஒட்டிதானே உள்ளன. விழுப்புரம் ஆட்சியர்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள், குடியிருப்புகள் ஏரிக்குள்தானே உள்ளன. இந்த கட்டி டங்களை இடிக்க முடியுமா? இதுவரை யில் குடியிருப்புகளை இடித்த ஒரு இடத்திலாவது மீண்டும் நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளதா?

மாநில உரிமை பறிப்புக்கு எதிராக வழக்கு

அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்குகளை முறையாக நடத்தாத தால், நீதிமன்றங்கள் தவறான தீர்ப்பு களை கொடுத்துள்ளன. வருவாய்த் துறை நிலை ஆணைகளின்படி, மாநி லத்தில் உள்ள நிலத்தை பராமரிப்பது, வகைமாற்றம் செய்து பயன்படுத்துவது மாநில அரசின் உரிமை. இதை நீதி மன்றங்கள் தட்டிப் பறிக்கின்றன. இத னை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கவேண்டும். ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு தர முடியாது என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து  ஓராண்டுக்கும் மேலாக தமிழக அரசு உறுதியாக போராடுகிறது. அதே நிலை பாட்டை குடியிருப்பு விவகாரத்தில் எடுக்க மறுப்பது ஏன்? குடியிருப்புகளை இடிப்பதை எதிர்த்து விருதுநகர், கோவிந்தசாமி நகர், படப்பை ஆகிய இடங்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்னும் எத்தனை பேர் சாக வேண்டும்?

குடியிருப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும்

பெட்ரோலியப்பொருட்கள், அத்தியா வசியப் பொருட்களின் விலை உயர் வால் மக்கள் படாதபாடுபடுகின்றனர். பாஜக ஆட்சியில் மக்கள் நிம்மதியற்று தவிக்கின்றனர்.  பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு பாதுகாப்பு கேடயமாக இருக்க வேண்டிய மாநில அரசு,  அவர்களின் வீடுகளை இடிக்கலாமா? சென்னை நகர மக்களின் வாழ்வா தாரப் பிரச்சனை பூதாகரமாக மாறி யுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் ஒற்றை அறை வீடுகளில் வாழ்கின்றனர்; வாடகைக்கு குடியிருக்கின்றனர். நகர்ப்புற மக்களின் குடியிருப்புக்காக மிகப் பெரிய திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். கிண்டி ரேஸ்கோர்ஸ் போன்ற இடங்களில் அடுக்குமாடி வீடு களைக் கட்டி, குறைந்த வாடகையில் தர வேண்டும்.

வேகமாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை

பச்சைத் தமிழன், பரம்பரைத் தமிழன் என அனைவரும் புறம்போக் கில் பிறந்து, புறம்போக்கிலேயே வாழ்ந்து சாவதில் என்ன பெருமை இருக்கிறது? பட்டா வழங்குவதற்காக அரசு பல்வேறு ஆணைகளை வெளி யிட்டுள்ளது. ஆனாலும் பட்டா  கிடைக்கவில்லை. குடியிருப்போ ருக்கே நிலம் சொந்தம் என்று கேரளா வில் முதலமைச்சராக இருந்த இ.எம்.எஸ். கையெழுத்திட்டார். அந்த அதி காரம் தமிழக முதலமைச்சருக்கும் உள் ளது. அதை முதலமைச்சர் செய்ய வேண்டும். தொழிற்சாலைகள், நிறு வனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள் போன்றவை அமைந்துள்ள இடத்திற்கு அருகே அரசு நிலம் இருக்கு மானால், அதற்கு ஈடாக வேறு இடத்தைக் கொடுத்துவிட்டு அந்த இடத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று அர சாணை வெளியிடப்பட்டுள்ளது. முத லாளிகளுக்கு தேவை என்றால் உடனே அரசாணை வெளியிடப்படுகிறது. சாஸ்திரா பல்கலைக் கழகம் 30  ஏக்கர்  அரசு நிலத்தை எடுத்துக்கொள்வ தற்காகவே இந்த அரசாணை கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படி யானால் ஏழை மக்களுக்காகவும் அரசாணை வெளியிடலாமே?

வீடுகளை இடிக்காதீர்?

சென்னை மயிலாப்பூர் கோவிந்த சாமி நகரில் ராஜீவ்ராய் என்பவருக்கு, அறநிலையத்துறைக்கு சொந்தமான 50 கிரவுண்ட் நிலத்தை விற்றுள்ளனர். ஒரு கிரவுண்ட் நிலம் வெறும் 3 ஆயிரம் வீதம் 1.50 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே அறநிலையத்துறை விற்றுள்ளது. அதேசமயம் கோவில் நிலத்தில் உள்ள  எளிய மக்களின் வீடுகளை இடித்து தள்ளுகிறார்கள். தஞ்சாவூரில் 1.50கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை  அறநிலையத்துறையினர் இடித்துள் ளனர்.  கோவிந்தசாமி நகரில் இப்பிரச்ச னையில் மனமொடிந்து கண்ணையன் என்ற கூலித் தொழிலாளி இறந்தபோது, சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர், வீடுகளை இடிப்பது இதுவே கடைசி யாக இருக்கும் என்றார். அதைப்பாராட்டி கடிதம் எழுதினேன். அதற்கு மாறாக சம்பவங்கள் நடைபெறுகின்றன. விரும் பதகாத நிகழ்வுகள் நடைபெறாமல் அரசு செயல்பட வேண்டும்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.