tamilnadu

img

தெருக்களில் சாதிப் பெயரை நீக்கியது போல் அரசுப் பள்ளிகளிலும் நீக்கி விடுங்கள்

சென்னை, ஜூலை 26- தெருக்களில் சாதிப் பெயரை நீக்கியது போல் அரசுப் பள்ளிகளி லும் சாதிப்பெயரை நீக்கி விடுங்கள்  என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து  எடுத்து விசாரணை நடத்தி வரு கிறது. இந்த வழக்கு வெள்ளியன்று (ஜூலை 26) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய் யப்பட்டது. அதில், கல்வராயன் மலையில் 150 பள்ளிகள் இருப்பதாக வும், பல்வேறு வசதிகள் செய்து  கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக் கப்பட்டது. இந்த அறிக்கையை பார்த்த நீதி பதி பாலசுப்ரமணியம், கல்வராயன் மலைப் பகுதியில் அடிப்படை வசதி கள் உள்ளதா எனவும், மக்கள் வரிப்  பணத்தில் நடத்தப்படும் அரசு பள்ளி களில் சாதி பெயர் இருக்கலாமா? என்று அரசிடம் கேள்வி எழுப்பி னார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ கத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சாதிப்பெயர் பயன்படுத்தக்கூடாது  என தெரிவித்தார். தெருக்களில் உள்ள சாதிப் பெயரை நீக்கியது போல் அரசு  பள்ளிகளுக்கு சாதி பெயரை நீக்கி விடுங்கள் என நீதிபதி கூறினார். கல்வராயன் மலை பகுதிகளை பழங்குடியினர் நலத்துறை இயக்கு நர் தலைமையில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அரசு குழு வுடன் மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி யும் உடன் செல்ல வேண்டும் என்று  நீதிபதி உத்தரவிட்டார். வழக்கை வரு கிற 9 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.