tamilnadu

img

பத்திரிகையாளர்  சுதாங்கன் காலமானார்

மதுரை:
மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்த நிலையில்  சனிக்கிழமை மாலை அவர் காலமானார்.சுதாங்கன், தினமணி, விகடன்குழுமங்களில் பணியாற்றியவர். சில தொலைக்காட்சிகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். தினமணி நாளிதழில் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர். ஜெயா தொலைக்காட்சியிலும் பணியாற்றியுள்ளார்.1986-ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென்பத்திரிகையின் விருதை பெற்றவர். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு தொடர்கதைஎழுதியுள்ளார். சுதாங்கனுக்கு ஆகாஷ் என்ற ஒரு மகன்உள்ளார்.

;