tamilnadu

img

ஜன.9 சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில மாநாடு

சென்னை, ஜன. 5 – தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் 4வது மாநில மாநாடு ஜன.9 அன்று சென்னையில் நடை பெறுகிறது. இந்த மாநாட்டில் காஷ்மீர் அனைத்து எதிர்க்கட்சிக ளின் ஒருங்கிணைப்பாளர் யூசுப் தாரி காமி பங்கேற்கிறார். சிறுபான்மையினர் நலனுக்காக தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தொடர் இயக்கம் நடத்தி வருகிறது. விசாரணையின்றி நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லா மிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும், சிறுபான்மையின ருக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தியதை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தொடர் இயக்கம் நடத்தி வருகிறது. அமைச்சர் பங்கேற்பு இந்த இயக்கத்தின் 4வது மாநில மாநாடு, ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை மன்றத்தில் நடைபெறுகிறது. மாநாட்டில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு சிறு பான்மையினர் ஆணைய தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், முது முனைவர் சத்தியவேல் முருகனார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். மாநில மாநாட்டையொட்டி மாநாட்டு வரவேற்புக் குழு சார்பில்  சுவர் விளம்பரம், மக்கள் சந்திப்பு இயக்கம் என பல்வேறு வகைகளில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.  இதன் ஒரு பகுதியாக வழி பாட்டுத் தலங்களில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. சைதாப் பேட்டை மசூதி வாசலில் வரவேற்புக் குழு தலைவர் க.பீம்ராவ், செய லாளர் ஒய்.இஸ்மாயில், பொருளா ளர் கே.மணிகண்டன், நிர்வாகிகள் ஹாஜி பி.கே.பீர் முகமது, ஹாஜி ஜி.ரஹ்மத்துல்லா, ஏ.பி.சாரி உள் ளிட்டோர் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.