வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங் கரும், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ-யும் தென் ஆப்பிரிக்காவில் சந்தித்துக் கொண்டனர். ஜி-20 நாடுகளின் வெளி யுறவுத்துறை அமைச்சர் கள் கூட்டம் தென் ஆப்பிரி க்காவின் ஜோகன்னஸ்ப ர்க்கில் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக நட்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனொரு பகுதியாக, சீன வெளி யுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடனும் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து ஜெய்சங்கர் உரையாடினார். சீன - இந்தியா உறவு களில் ஏற்பட்டு வரும் முன் னேற்றங்கள், எல்லைப் பகுதிகளில் அமைதியை தொடர்வது, கைலாஷ் மான சரோவர் ஆலயத்திற்கான யாத்திரையை மீண்டும் துவங்குவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்து குறித்து ஜெய்சங்கர் விவாதி த்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.