சென்னை, ஏப்.8- ஜாக்டோ-ஜியோ சார்பில் வரும் 11ஆம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு நடத்த விருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஓய்வூதி யர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல் லும் விதமாக ஏப்ரல் 11ஆம் தேதி கோட்டை யை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் படும் என்று ஜாக்டோ-ஜியோ சார்பில் அறி விக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சனிக் கிழமை (ஏப். 8) அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையையொட்டி போராட்டம் தற்காலி கமாக ஒத்தி வைக்கப்படுவதாக ஒருங்கி ணைப்பாளர்கள் அறிவித்தனர். இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கி ணைப்பாளர்கள் கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ சார்பில் ஏப்ரல் 11ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் அறி விக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ் நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சனிக்கிழமை (ஏப். 8) பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ. வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் அடங்கிய குழு தலைமைச் செயலகத்தில் மாநில ஒருங்கி ணைப்பாளர்களை அழைத்துப் பேசினர். அப்போது மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் கு.வெங்கடேசன், இரா.தாஸ், கு. தியாகராஜன் ஆகியோர் அமைச்சர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்து, கோரிக் கைகள் தொடர்பாக விரிவாக விளக்கப் பட்டது. மேலும், நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சரின் ஆசிரியர், அரசு ஊழியர் விரோத போக்கையும் அமைச் சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற னர்.
அப்போது நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சரின் ஊழியர் விரோத போக்கினால் ஆசிரியர், அரசு ஊழி யர் மற்றும் அரசுக்கு இடையே ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அமைச் சர்கள் தெரிவித்தனர். மேலும், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தொடர்பான பணிப் பாதுகாப்பு சட்டம், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. பேச்சு வார்த்தையின் இறுதி யில், தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, கோரிக்கைகளை நிறை வேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும், முதலமைச்சரை சந் திப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வ தாகவும் அமைச்சர்கள் வாக்குறுதி அளித்த னர். மேலும் கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தனர். அதன் பின்னர், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூடி, தமிழக முத லமைச்சர் ஆசிரியர் அரசு ஊழியர்களின் மீதுள்ள அக்கறையின் அடிப்படையில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ததற்கும், அமைச்சர்கள் குழு அளித்த உத்தரவாதத் தின் அடிப்படையில் நல்லெண்ண நட வடிக்கையாக கோட்டை முற்றுகை போராட் டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.