“அம்மா ஒரு கனவு கண்டேன்... நம்ம வீடு மத்தியப் பிரதேசத் துல இருக்குற மாதிரி...” அம்மா முகத்தில் கவலை ரேகைகள். சட்டென்று எழுந்து போய் அப்பாவிடம், “ஏங்க நம்ம புள்ளைக்கு ஏதோ ஆயிடுச்சு..” மள,மளவென்று மகளை அழைத்துக் கொண்டு மாந்திரீகரிடம் சென்றனர். சிறுமி ஏதோ சொல்ல முயற்சித்தபோதெல்லாம் அடக்கி வைத்தனர். மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு சென் றாள். பள்ளிக்கு அம்மாவும் உடன் சென்றார். “ஏன் ரெண்டு நாள் வரல” அம்மா முந்திக்கொண்டு, “ஏதேதோ பேசுறா. மந்திரிச்சு விட்டோம்.” “என்ன ஆச்சு..”மாணவியிடம் ஆசிரியர் கேட்டார். “சார... கண்ட நகர்வுக் கொள்கைப்படி தட்டுகள் நகர்ந்து எங்க வீடு மத்தியப் பிர தேசத்துல இருக்குற மாதிரி நெனச்சேன்... அப்புடியொரு கனவும் வந்துச்சு...” மாணவியின் அம்மாவையும் வகுப்புக் குள் அழைத்து உட்கார வைத்தார் ஆசிரியர். மாணவர்களைப் பார்த்து, “உங்க வீடெல்லாம் எங்க இருக்கு சொல்லுங்க...” “அப்போ இவர்தான் எதையோ கிளப்பி விட்டுருக்காரா” என்றபடியே ஆசிரியரைப் பார்த்தார் அம்மா. “இதுல மாந்திரீகம்னு சொல்லி காச அழுதிட்டோமே” என்று முனகிக் கொண்டார். ஒரு மாணவன் எழுந்து, “சார். எங்க வீட்லருந்து பாத்தா இமயமலை தெரியுது..” மற்றொரு மாணவன், “இன்னிக்குக் காலையில கங்கைல குளிச்சேன்.. வீட்டுக்கு எதிர இருக்குறதுனால தினமும் கங்கைலதான் குளியல்... ஆனா, பயமா இருக்கு.. பொணமா மிதந்து வருது..” மாணவர்கள் கைகொட்டிச் சிரித்தனர். “செங்குத்தா இருந்த ஆரவல்லி, தட்டுகள் நகர்ந்ததுனால படுக்கை வசமா மாறிடுச்சு... தென்மேற்குப் பருவக்காற்று ராஜஸ்தான் பாலைவனத்த சோலை வனமா மாத்திருச்சு... அங்கதான் எங்க வீடு இருக்கு..” - அடுத்த மாணவன். “ஓ... இது பாடம்.. தப்பு செஞ்சுட்ட னோ” என்றவாறே மகளைப் பார்த்தார். மகளோ, சக தோழிகளுடன் சேர்ந்து விந்திய மலையில் உலாவிக் கொண்டிருந்தார்.
அதற்குள், ஒரு மாணவன், தென் மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும் போது என்று பாட ஆரம்பித்திருந்தார். “பரவாயில்லையே, பழைய பாட்டு கூட மாணவர்களுக்குத் தெரிஞ்சுருக்கே” என்றார் அம்மா. உடனே ஆசிரியர், “தென் மேற்குப் பரு வக்காற்று தேனிப்பக்கம் வீசுறப்ப, தேனில ஏன் சாரல்... மழை ஏன் பெய்யல” என்று கேட்டுப் பின்னர் அவரே தொடர்ந்தார். “அரபிக்கடலில தோன்றும் தென் மேற்குப் பருவக்காற்று, கேரளாவைத் தாண்டி, மேற்குத் தொடர்ச்சி மலைல மோது றதுனால கேரளாவுல மழை, தேனில சாரல். பாலக்காட்டுல மழை, கோயம்புத் தூர்ல சாரல், மும்பைல மழை, புனேல சாரல்..” என்று விளக்கினார். மாணவிகளில் சிலர் குதித்தெழுந்து, “அப்படினா, இந்த தேனி, கோயம்புத்தூர், புனேலாம் மழை மறைவுப்பகுதியா சார்..” என்று கேட்டனர். அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள். “அம்மா” என்று ஆசிரியர் ஆரம் பிச்சார்... “அம்மாவோ, சார் நானும்தான் படிச்சுருக்கேன்... மாணவர்களுக்கு கண்டம் நகர்வுக் கொள்கை, புவித்தட்டு கள் மோதல் சொல்லித் தந்துருக்கீங்க...” “ஆமாம்... நான்தான் எல்லாரையும் கற்பனை பண்ணிப் பாக்கச் சொன்னேன்..” “நல்ல உத்திதான்... இவங்களுக்கு மறக்காது...” என்று சொல்லி விட்டு மாண வர்களைப் பாத்து, “புதிய கண்டுபிடிப்பு கள் எதையுமே இந்த உலகம் உடனடியாக ஏத்துக்கல... அதுமாதிரிதான் இந்த கண்ட நகர்வுக் கொள்கையும்..” “ஓ... அம்மாவுக்கு இவ்வளவு தெரியுமா...” சில மாணவர்கள் வெளிப்படையாகவே வார்த்தைகளை உதிர்த்து விட்டனர்.. “இதக் கண்டுபிடிச்சவரு பெரிய வானிலை ஆய்வாளர். அப்புறந்தான் புவி உருவாக்கயியலில் ஏராளான ஆய்வுகளச் செஞ்சாரு.” “அவரு யாரும்மா?” “நான்தான்” என்று ஒரு குண்டைப் போட்டார். “என்னோட பேரு, ஆல்பிரெட் வெஜினெர்... கற்பனை உங்களுக்கு மட்டும் தான் பண்ண முடியுமா?” என்றவாறே விடை பெற்றார் அம்மா.