tamilnadu

img

12 மணிநேர வேலை முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு கர்நாடகாவில் ஐடி ஊழியர்கள் போராட்டம்

12 மணிநேர வேலை முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு கர்நாடகாவில் ஐடி ஊழியர்கள் போராட்டம்

கர்நாடக மாநில அரசு தகவல் தொழில்நுட்ப (ஐடி) ஊழி யர்களின் அதிகபட்ச பணி நேரத்தை  10 மணி நேரத்திலிருந்து 12 மணி  நேரமாக உயர்த்த முன்மொழிந் துள்ளது. தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பை மீறியே இந்த முன்மொழிவு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.  கர்நாடக மாநில அரசின் தொழில் துறை அமைச்சகம் நடத்திய பல தரப்பு கூட்டத்தில் இந்த முன் மொழிவு முன்வைக்கப்பட்டது. அதன் படி, கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தில்  (KSCEA) திருத்தம் செய்து, அதிகபட்ச பணி நேரத்தை (ஓவர் டைம் உட்பட) 10 மணியிலிருந்து 12 மணியாக உயர்த்த முன்வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கர்நாடக ஐடி /ஐடிஇஎஸ் தொழிலாளர் சங்கம் (கேஐடியு) கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளது. போராட்டம் இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் அரசின் 12 மணிநேர வேலை முன்மொழிவைக் கண்டித்து இந்தியாவின் ஐடி தலைநகரான பெங்களூருவின் ஏஐசிஎஸ் உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் ஜூன் 18ஆம் தேதி முதல் ஐடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேஐடியு கண்டனம் இதுதொடர்பாக கர்நாடக ஐடி/ஐடிஇஎஸ் தொழிலாளர் சங்கம் (கேஐ டியு) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக அரசின் இந்த 12 மணிநேர முன்மொழிவு, தொழிலாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படை உரிமைக்கு எதிரான தாக்குதல் ஆகும். இந்த  மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஐடி நிறுவனங்கள் தற்போதைய மூன்று ஷிப்ட் முறையிலிருந்து இரண்டு ஷிப்ட் முறைக்கு மாற்றப்படும். இதன்  விளைவாக மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும்.  மன ஆரோக்கியத்தில் தாக்கம் குறிப்பாக, 25 வயதுக்குட்பட்ட இந்தியாவின் 90% கார்ப்பரேட் பணியாளர்கள் மன அழுத்தம் மற்றும் கவலைகளால் பாதிக்கப் பட்டுள்ளனர் என உணர்ச்சி நல்வாழ்வு  அறிக்கை 2024 (State of Emotional  Well-Being Report 2024) குறிப்பிடு கிறது. இந்த அதிகப்படியான வேலை  அழுத்தம் காரணமாக ஐடி துறையில் தற்கொலைகள் ஏற்கெனவே பொது வாக உள்ளன. தற்போதைய பணி நேரம் அதிகரிப்பது தொடர்பான முன் மொழிவு தற்கொலை சம்பவங்களை மேலும் அதிகமாக்கும்.  முன்பு கர்நாடக பாஜக அரசும், ஐடி தொழி லாளர்களின் பணி நேரத்தை 14 மணி யாக உயர்த்த முயன்றது. ஆனால் கேஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப் பால் அந்த முன்மொழிவு திரும்பப் பெறப்பட்டது. ஆனால் தற்போதைய காங்கிரஸ் அரசு ஐடி நிறுவனங் களின் அழுத்தத்தின் கீழ் அதே  முன்மொழிவை மீண்டும் திணிக் கிறது. அதனால் 12 மணிநேர உத்த ரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.