சென்னை, மே 21 - கவிஞர் தமிழ்ஒளியின் இடதுசாரி கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்ற வர் செ.து.சஞ்சீவி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் புகழஞ் சலி செலுத்தினார். கவிஞர் தமிழ்ஒளி-யின் படைப்புகளை தேடித்தேடி பதிப்பித்து, மக்களிடம் கொண்டு சேர்த்தவர் செ.து. சஞ்சீவி.முதுமையின் காரண மாக மே.20 அன்று கால மானார். அவருக்கு வயது 94. செனாய் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்க ப்பட்டிருந்த உடலுக்கு ஞாயிறன்று (மே 21) ஜி.ராம கிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். அப்போது நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன் ஏராள மான தகவல்களை பகிர்ந் தார். அப்போது, தமிழ் ஒளியின் படைப்புகளை பதி ப்பிக்கும் பணியிலேயே தனது வாழ்நாள் முழுவதை யும் சஞ்சீவி செலவழித்தார் என்றார். சஞ்சீவியின் தூண்டுதலாலேயே தமிழ் ஒளி படைப்புகளை வாசித் தேன் என்றும் அவர் குறிப் பிட்டார். மேலும் அவர் கூறுகை யில், “வயது முதுமை யையும் பொருட்படுத்தாமல் கட்சி அலுவலகத்திற்கு வந்து தமிழ்ஒளி நூல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வும், நூல்களை நாட்டு டமையாக்கவும் முயற்சி செய்ய வலியுறுத்தினார். அர சுக்கும், அமைச்சருக்கும் கடிதம் எழுதி அதற்கான முயற்சிகளை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்டு வரு கிறது” என்றார்.
“இன்றைய காலகட்டத் தில் விவாதிக்கும் ஆணவக் கொலை போன்ற சமூகப் பிரச்சனைகளை, 1950களி லேயே தனது வீராயி போன்ற படைப்புகளில் கருப்பொரு ளாக கொண்டுவந்தவர் தமிழ்ஒளி. அத்தகையவரின் படைப்பை பதிப்பித்து மக்க ளிடம் கொண்டு சென்ற மகத் தான பணியை மேற்கொண்ட வர் சஞ்சீவி. தமிழ்ஒளியின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வது, இடது சாரி கருத்துக்களை பரப்பு வதாகவே கருத வேண்டும். சஞ்சீவியின் பணியை நாம் அனைவரும் தொடர்ந்து செய்வோம்” என்றும் அவர் கூறினார். அன்னாரது உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா.நல்லக் கண்ணு திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா, பேரா. வீ.அரசு, புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை முன்னாள் இயக்குநர் வீரபத்ரசுவாமி, தமுஎகச துணைத் தலைவர் மயிலைபாலு, செயற்குழு உறுப்பினர் இரா.தெ.முத்து, மாவட்டச் செயலாளர்கள் மலர்விழி (தென்சென்னை), மணிநாத் (வடசென்னை), தென்சென்னை மாவட்ட தமுஎகச தலைவர் சி. எம்.குமார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, எழுத்தாளர் உதயை மு.வீரையன், தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக் குழு பொருளாளர் வே. மணி, திமுகவின் சுந்தர்ராஜன் எம்.சி.காஞ்சிபுரம் க. தேவ ராஜன், புதுச்சேரி எஸ். குமார், திருநாவுக்கரசு உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அன்னாரது இறுதி நிகழ்ச்சி நுங்கம்பாக்கம் மயானத்தில் நடைபெற்றது.