tamilnadu

img

சர்வதேச புத்தகக் கண்காட்சி

சென்னை,ஜன.16- சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் 2023 புத்தக கண்காட்சி நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச புத்தக கண்காட்சி ஜன.16 முதல் வரும் 18 வரை நடைபெறுகிறது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.  இந்தப் புத்தகக் கண்காட்சி யில் மலேசியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், அமெ ரிக்கா என 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பதிப்பா ளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்றனர். இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி யில் 66 அரங்குகள் அமைக்கப்பட் டுள்ளன. பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-

தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். அதன்படி சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கி இருக்கிறது. இதில் எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். 3 நாள் நடைபெறுவதில் பங்கேற்க முடியாத வெளிநாட்டு பதிப்பா ளர்கள் கூட வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட இணையலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் 30 புத்தகங்கள் வெளிநாட்டு மொழி களுக்கு கொண்டு செல்ல திட்ட மிட்டுள்ளோம். அதேபோல் தமிழ்நாடு பதிப்பாளர்கள் வெளி நாட்டிற்கு செல்லவும் எதிர் காலத்தில் அரசு திட்டமிடும்  இவ்வாறு அவர் கூறினார்.  இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா பொது நூலகத் துறை இயக்குநர் இளம்பகவத், தமிழ்நூல் பாட நிறுவனத் தலை வர் திண்டுக்கல் ஐ.லியோனி, மக்க ளவை உறுப்பினர் தமிழச்சி தங்கப் பாண்டியன், அதிகாரிகள், எழுத் தாளர்கள், பதிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.