tamilnadu

img

சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி

சென்னை, நவ. 5- “சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி” முதன்முறையாக சென்னையில் ஜனவரியில் நடை பெறுகிறது. தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்  கழகமும், தென்னிந்திய புத்தக  பதிப்பாளர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் சங்கமும் இணைந்து இந்த  புத்தகக் கண்காட்சியை நடத்த உள்ளன.  அதற்கான இலச்சினை வெளியீட்டு விழா கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் சனிக்கிழமை (நவ. 5) நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இலச்சினையை வெளியிட்டு பேசுகை யில், அறிவு சார்ந்த வாசிப்புக்கான சர்வதேச புத்தகக் கண்காட்சியை வரும்  ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் நடத்த உள்ளோம். சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் அரங்கிற்கு அருகிலேயே தனியாக சர்வதேச அரங்கம் அமைக்கப்படும் என்றார்.

 உலகளவில் புகழ்பெற்ற புத்தகக் கண்காட்சி பிராங்க்பர்ட், லண்டன்  ஷார்ஜா, பெய்ஜிங், பொலோனியா போன்ற நகரங்களில் நடைபெறும். தற்போது முதன்முறையாக தமிழ கத்தில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

அறிவு பரிமாற்றமே நோக்கம்

உலகளாவிய அறிவு பரிமாற்றமே இந்த கண்காட்சியின் நோக்கம். மேலும்  பல நோபல் பரிசு பெற்ற வெளிநாட்டு அறிஞர்களின் புத்தகங்கள் இதில் இடம்பெறும். இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க பல நாடுகளிலிருந்தும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வரவிருக்கிறார்கள். இதன் மூலம் தமிழின் செழுமை மிக்க இலக்கியங்கள் உலக மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்படும் என்று அவர் கூறினார்.

20 நாடுகள் பங்கேற்பு 

புத்தகங்களுக்கான மொழியாக்க உரிமைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள இந்தக் கண்காட்சி ஒரு சிறந்த களமாக அமையும்.  50 நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக் கிறோம். குறைந்த கால அவகாசமே உள்ளதால் குறைந்தபட்சம் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இதில் பங்கேற்பார்கள் என்று எதிர் பார்க்கிறோம். வருங்காலங்களில் கூடுதல் நாடுகள் பங்கேற்கும். எதிர் காலத்தில் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவும் உலகப் புத்தக வாசகர்களால் கொண்டாடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதில் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர் கஜலெட்சுமி, பொது நூலக  இயக்குநர் க.இளம்பகவத், பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.