tamilnadu

img

கொடுஞ்செயலில் இவரினும் இழிவான மsனிதர் உண்டோ?

‘‘ஏழையென்றும், அடிமையென்றும் எவனுமில்லை சாதியில் இழிவுகொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே’’ பாரதியின் வார்த்தைகளை பொய்யாக்கும் மனிதர்கள் இந்தியாவில் இருக்கத்தான் செய் கிறார்கள். இது நமக்கு வேதனையளித்தாலும் உண்மையானதாகும். சாதியின் பெயரால் மக்களை இழிவுபடுத்துபவர்களும், படு கொலை செய்பவர்களும் இழிவான மனித ரன்றி வேறு யார்?. அதுவும் புதுக்கோட்டை மாவட்டம், இறை யூர் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த சம்பவம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பிரச்சனையாகும். தலித் மக்களுக்கு தண்ணீர் சேமித்து வைக்கும் குடிநீர் தொட்டி யில் மனித மலத்தை கலந்துள்ளனர் சில கொடி யவர்கள். தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும், இழிவுகளையும் சொல்லி மாளாது. கீழத்தஞ்சையில் சாணிப்பால் குடிக்க வைத்தது, திருச்சி மாவட்டம், திண்ணியம் கிராமத்தில் தலித் ஒருவரது வாயில் மலத்தை திணித்தது, திண்டுக்கல் மாவட்டம், கவுண்டம்பட்டி கிராமத்தில் தலித் ஒருவரின் வாயில் சிறுநீர் கழித்தது என்ற அருவருக்கத்தக்க நிகழ்வுகளின் தொடர்ச்சி யாக புதுக்கோட்டையில் இந்த இழிசெயல் நடந்துள்ளது. இதில் வருந்தத்தக்கதும், ஏற்க முடியாதது மான அம்சம் என்னவென்றால் இந்த இழி செயலை செய்த குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாதது தான். காவல்துறையை நவீனமயமாக்க ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடிகளை செலவிடுகிறது அரசாங்கம். ஆனால், இந்த சமூக இழிவைச் செய்தவர்களை - வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி கொடுங்குற்றம் செய்தவர்களை கண்டறியப்படவில்லை - கைது செய்யப்பட வில்லை - என்பது வெட்கக்கேடான தாகும்.

சட்ட மன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பல அமைச்சர்களும், பத்திரிகையாளர்களிடையே பொறுப்பான அதிகாரிகளும் “குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவார்கள்” என உறுதிபட தெரிவித்தும் அந்த உறுதி நடைமுறையில் காட்டப்படாதது மனித நேயம் உள்ளவர்களை மனம் பதற வைக்கிறது. காவல்துறைக்கு இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த கொடுஞ்செயலை செய்தவர் களை அடையாளங்கண்டு கைது செய்யாமலி ருப்பதை அறிவுஜீவிகள் மட்டுமல்ல; சாதாரண மக்களும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சாதிய சக்திகளின் பால் காவல்துறையின் அலட் சியத்தை அதுவும் தலித் மக்களுக்கு கொடுமை கள் இழைத்தவர்களை கைது செய்வதில் காட்டும் பாராமுகத்தை பல பிரச்சனைகளில் கண்டிருக்கிறோம் என்பது கடந்த கால அனு பவம். அந்நிலை இப்பிரச்சனையிலும் தொடரக் கூடாது. குற்றவாளிகள் கண்டறியப்பட்டு உடன டியாக கைது செய்யப்பட வேண்டும் என்பதே ஜனநாயக உள்ளங்களின் எதிர்பார்ப்பு. அடுத்து, இந்த இழிசெயலின்பால் பல  முதலாளித்துவ கட்சிகள் காட்டும் அக்கறை யற்ற போக்கு துயரமானதாகும். அனைத்து அரசியல் இயக்கங்களும், ஜனநாயக இயக்கங் களும் ஒருங்கிணைந்து குரல்கொடுக்க வேண்டிய பிரச்சனை இது. ஆனால், இடதுசாரி இயக்கங்கள் சில தலித் அமைப்புகள் செய் கின்ற தலையீடுகளே இதுவரை வலுவான தாகவும், குறிப்பிடத்தக்கதாகவும் இருந் துள்ளன. இச்சம்பவம் அறிந்ததும் பதறியடித்துக் கொண்டு உடனடியாக செயல்பட்ட இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கந்தர்வக் கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினருமான எம்.சின்ன துரை விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு அதிகாரிகளை வரவழைத்து உடனடி நட வடிக்கைகள் சிலவற்றை எடுக்க வைத்தார். தலித் மக்களுக்கு மாற்று குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார். மருத்துவ முகாமிற்கான ஏற் பாடும் செய்யப்பட்டது. இறையூரில் தலித் மக்க ளுக்கு எதிரான இந்த இழிசெயலை கண்டித்து சிபிஐ (எம்), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக மாநிலம் முழுவதும் கண் டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இயக்கங்களைச் சார்ந்தவர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தலித் மக் களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை ஆய்வு செய்த னர். பாதிக்கப்பட்ட தலித் மக்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் இக்கிராமத்தில் வேறு ஏதே னும் பிரச்சனை உள்ளதா? எனக்கேட்க, மேலும் பல தீண்டாமைக் கொடுமைகளை அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

அங்குள்ள அய்யனார் கோவிலுக்குள் அதுவரை தலித் மக்கள் நுழைய முடியாது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு அம்மக்களை தானே அய்யனார் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு நடத்த ஏற்பாடு செய்கிறார். அக்கிராமத்தில் உள்ள தேநீர் கடைகள் சிலவற்றில் கடைப் பிடிக்கப்பட்ட இரட்டைக்குவளை முறையும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படு கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி தேநீர் கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவாகி கைது செய்யப்படுகிறார். இவ்வாறு ஒரு கொடு மையை கண்டறியப்போன அதிகாரிகள் வேறு சில கொடுமைகளை கண்டறிந்து முடிவுகாண வேண்டியதாயிற்று. கடந்த காலங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டறிந்த கொடுமைகள் ஏராளம். நடைபெற்ற போராட்டங்களும் ஏரா ளம். நாட்டின் விடுதலைக்கு முன்பே திரு வாங்கூர் சமஸ்தானத்திற்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை சமஸ்தானத்தில் தான் தீண்டா மைக் கொடுமைகள் அதிகம் நிலவியதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் புதுக்கோட்டை மாவட்டம் ஒரு வரலாற்று புகழ்மிக்க மாவட்டமாகும். தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்யும் கல்வெட்டுகள், சிற்பங்கள், பாறை ஓவியங்கள் உள்ளிட்ட பல தொல்லியல் அடையாளங் களைக் கொண்ட மாவட்டமாகும். உலகப் புகழ்பெற்ற சித்தனவாசல் ஓவியம், சமணர் படுகைகள், சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற ஆவுடையார்கோவில், குடுமியான்மலை, நார்த்தாமலை உள்ளிட்ட பல கலைக்கோவில்கள் இங்குதான் உள்ளன. பி.யூ. சின்னப்பா, ஏ.வி.எம். ராஜன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள், ஏராளமான வீதி நாடக கலைஞர்கள்,

ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் அகிலன் இவர்களெல்லாம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள். இத்தகைய வரலாற்றுப் பெருமைகள் பல இருந்தாலும் மறுபுறம் வறுமையும், வேலையின்மையும், சாதியக் கொடுமைகளும் நிறைந்த மாவட்டமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளது. பொதுவான சீர்திருத்தக் கருத்துக்களை பல இயக்கங்கள் பிரச்சாரமாக மட்டுமே நடத்தி வந்த நிலையில் செங்கொடி இயக்கம் தான் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளது. இதற்கான நீண்ட பட்டியலை நம்மால் தர முடியும். புதுக்கோட்டை மாவட்டம், திருநல்லூர் என்ற கிராமத்தில் மூன்று தலித் இளைஞர்கள் சாதி இந்து பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக வெகுவாக அவமானப்படுத்தப்பட்டனர். இத்தம்பதிகளை மொட்டையடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதைகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடுமை நடந்தது. அனைவரும் சாதி இந்துக்களாக இருந்த 12 பேர் கொண்ட ஊர் பஞ்சாயத்து இப்பிரச்சனையில் அளித்த தீர்ப்பு மிகக் கொடுமையானது. இந்த இளைஞர்களை ஆடைகள் இல்லா மல் மரத்திலேயே கட்டி வைத்து இரவு முழு வதும் தாக்குதல் நடத்தினர். இந்த இளைஞர் களின் உறவினர்களை வரவழைத்து அவர் களின் முன்னிலையில் இக்கொடுமைகளை அரங்கேற்றினர். ஊர்க்கோவிலைச் சுற்றி அங்க பிரதட்சணமாக உருண்டு வரச் செய்துள்ளனர். மறுநாள் அவர்களை ஊரைவிட்டே வெளி யேற்றியுள்ளனர். 1998இல் நடந்த இச்சம்பவத்தைக் கண்டித்து டிசம்பர் 9இல் புதுக்கோட்டை மாவட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வலு வான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கே. பாலகிருஷ்ணன்(இப்போதைய மாநில செயலாளர்) இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அரசு நிர்வாகம் - காவல்துறை - சாதிய சக்திகளை கண்டித்து ஆற்றிய உரை மிக முக்கியமானதாகும். இப்போராட்டத்திற்கு பிறகே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டு தலித் குழுக்களிடையே சண்டை எனக் கூறி வழக்கை முடிக்கவே முதலில் காவல் துறை முயன்றுள்ளது. சிபிஐ (எம்) உள்ளிட்ட இயக்கங்கள் நடத்திய போராட்டங்கள் - கொடுத்த நிர்ப்பந்தங்களுக்கு பிறகு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நூற்றாண்டில் தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளில் இது மிகக் கொடூரமானது என ஒரு பத்திரிகையாளர் கூட் டத்தில் வர்ணித்தார் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அதுமட்டுமல்ல, திருநல் லூர் கிராம தலித் மக்கள் சாதி இந்துக்களுக்கு வெறுப்பும், கோபமும் வரும் வகையில் ஏதேனும் சம்பவத்தில் ஈடுபட்டால் அந்த ஊர் மாரியம்மன்கோவில் திருவிழாவை ரத்து செய்து விடுவார்களாம். மாரியம்மனின் கடுங்கோபத்திற்கு அவ்வூர் மக்கள் ஆளாகி விடுவர் என்பதால்தான் இந்த திருவிழா ரத்து நடவடிக்கையாம். புதுக்கோட்டை மாவட்டத் தில் நிலவும் கொடுமைகளின் தன்மையை இத் தகைய நிகழ்வு வெளிப்படுத்துகிறது. இதுமட்டுமல்ல, குன்றாண்டார்கோவில் ஒன்றியம், தெம்மாவூர் என்ற கிராமத்தில் துக்க வீட்டில் தலித் மக்கள் தப்படிக்க மறுத்ததால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இப்பிரச்சனையிலும் சிபிஐ(எம்) வலுவாக தலையிட்டு கண்டன போராட்டங்களை நடத்திய பிறகே நிலமையின் கடுமை தணிந் தது. இக்கிராம மக்கள் தற்போது பாதுகாப் பாக இருக்கின்றனர் என்றால் செங்கொடி இயக்கம் நடத்திய வலுவான தலையீடுகளே அதற்கு பிரதான காரணமாகும். மின்னாத்தூர் என்ற கிராமத்தில் தலித் மக்களின் ஆலய நுழைவு போராட்டம் நடத்தி வெற்றி கண்ட இயக்கமாகவும் செங்கொடி இயக்கம் திகழ்கிறது. இம்மாவட்டத்தின் குன் றாண்டார்கோவிலில் தலித் மக்களின் முடி வெட்டும் உரிமையை நிலைநாட்டியதோடு, மஞ்சப்பட்டி கிராமத்தில் கொத்தடிமை முறை யையும், ராக்கதம்பட்டி கிராமத்தில் விவசாயக் கூலி கேட்டதற்காக நடத்தப்பட்ட கொடுமை யையும் எதிர்த்து போராடிய இயக்கம் செங்கொடி இயக்கம். கீரனூர் பஞ்சாயத்து தலைவராக புஷ்பம் என்பவர் தேர்வு செய்யப் பட்டார். இவரது செயல்பாட்டிற்கு சாதிய சக்தி கள் பெரும் முட்டுக்கட்டைகள் போட்ட போது அதை முடிவுக்கு கொண்டு வருவதில் சிபிஐ(எம்) பெரும் பங்காற்றியது. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகள் பல வடிவங் களை கொண்டதாகும். இதில் மிகக் கேடான ஒரு அம்சம், ஊர் பஞ்சாயத்து என்று அழைக்கப் படும் சாதி பஞ்சாயத்தாகும். மாமேதை அம்பேத் கர் உருவாக்கிய அரசியல் சாசனம் இந்த ஊர் பஞ்சாயத்திற்கு ஒரு பொருட்டல்ல. சமூக ரீதி யாக ஒடுக்கப்பட்டுள்ள தலித் மக்களை பாது காத்திடவும், உயர்த்திடவும் உருவாக்கப்பட் டுள்ள தீண்டாமை ஒழிப்புச் சட்டம், வன் கொடுமை தடுப்புச் சட்டம், பிசிஆர் சட்டங்கள் என அனைத்தையும் இந்த கும்பல் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

செங்கொடி இயக்கம் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி - தலித் அமைப்புகள் - ஜனநாயக அமைப்புகள் நடத்தும் வலிமைமிக்க போராட்டங்கள், அழுத்தும் நிர்ப்பந்தங்களால்தான் இச்சட்டங்களுக்கு உயிர் கொடுத்து காவல்துறையினர் அமல் படுத்துகின்றனர். இத்தகைய போராட்டங்களால் தலித் மக்களிடையேயும், ஜனநாயக சக்திகளிடையே யும் செங்கொடி இயக்கத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. கந்தர்வகோட்டையின் பல கிராமங்கள் செங்கொடி இயக்கத்தின் வலு மிக்க தளங்களாக மாறியுள்ளன. இத்தகைய போராட்டங்கள்தான் எம்.சின்னதுரை, கவிவர் மன் உள்ளிட்ட பல இளம் தோழர்களை செங் கொடி இயக்க போராளிகளாக உயர்த்தியுள் ளன. ஏற்கனவே, பெரி குமாரவேலு, பி.சண் முகம், ஆர்.கருப்பையா போன்ற தோழர்கள் மிகுந்த தியாக உணர்வோடு செங்கொடி இயக்க வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். இம்மாவட்டத் தில் செயல்பட்ட - செயல்பட்டு வரும் போராளி  களின் நீண்ட பட்டியலை நம்மால் இங்கு தர முடியும். இப்பின்னணியில்தான் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் சிபிஐ(எம்) சார்பாக எம்.சின்னதுரை போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார்.

எம்.சின்னதுரையின் வெற்றி ஒடுக்கப்பட்ட மக்கள் - ஜனநாயக சக்திகள் உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது என்றால் அது மிகையல்ல. இத்தகைய வரலாற்று சம்பவங்களை கணக்கில் எடுத்துதான் 2007இல் துவக்கப் பட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாட்டை 2010இல் புதுக்கோட்டையில் நடத்துவதென தீர்மானித்தோம். மிக எழுச்சியோடு நடைபெற்ற மாநாடு இது. மாநிலம் முழுவதுமிருந்து நூற்றுக் கணக்கான பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற பேரணியில் தலித் மக்கள் மட்டுமல்ல, இதர சமூகங்களை சார்ந்த உழைப்பாளிகளும் இணைந்து 3,000க்கும் மேற்பட்டோர் அணி வகுத்தனர். இதில் பெண்கள், இளைஞர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். அப்போதைய சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், அப்போ தைய தமிழக மாநில செயலாளர் என்.வரத ராஜன், கே. வரதராசன், பி. சம்பத், கே. சாமு வேல்ராஜ் உள்ளிட்ட பல தலைவர்கள் எழுச்சி யுரை நிகழ்த்திய மாநாடு இது. பல தலித் அமைப்புகளின் தலைவர்களும் உத்வேகத்து டன் கலந்து கொண்டனர். தலித் மக்களின் உரி மைகளையும், நலன்களையும் பாதுகாக்க ஒன்றுபட்டு அணிதிரளுமாறு அனைத்து ஜன நாயக சக்திகளுக்கும் இம்மாநாடு அறைகூவல் விடுத்தது. இன்றளவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பணிகள் நம்பிக்கையளிக்கும் விதத்தில் நடைபெற்று வருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது.