சென்னை, மே 9- செறிவூட்டப்பட்ட பசும் பாலை ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு இணையம் 27 மாவட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமப்புற பால் கூட்டு றவு சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்து, ஒன்றியங் கள் மற்றும் இணைய பால் பண்ணைகளில் சுகாதாரமான முறையில் பதப்படுத்தப்பட்டு, தமிழ்நாடு முழுவதுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு விநி யோகித்து வருகிறது. தற்பொழுது ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. கடந் தாண்டு சராசரி பால் விற்பனை யைவிட 3 லட்சம் லிட்டர் அதிகரித் திருக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட பால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப் பதிலும், கண்பார்வையை மேம்படுத்துவதிலும் மற்றும் எலும்புகளை உறுதிப்படுத்து வதிலும் பங்கு வகிக்கின்றது. பாலில் கால்சியம் மற்றும் பாஸ் பரஸ் சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த சத்துக்கள், எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு இன்றியமையாத வையாகும். மேலும் உடலுக்கு தேவையான கால்சியத்தை பெற்றுத் தருவதில் வைட்ட மின் D பங்களிப்பதினால்,
பாலில் வைட்டமின் D செறிவூட்டம் செய்வது மிகுந்த பயனளிப்பதாக இருக்கும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில் வைட்ட மின் ஏ மற்றும் டி செறிவூட்டப் பட்ட பால் அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பால் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித்துறை மானியத்தின் போது அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத் தும் வகையிலும் வாடிக்கை யாளர்களின் நலன் கருதியும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கள் கூட்டுறவு இணையத்தில், வைட்டமின் ஏ மற்றும் வைட்ட மின் டி செறிவூட்டம் செய்யப் பட்ட பசும் பால் (பர்ப்பிள் நிற பால் பாக்கெட்) செவ்வாய்கிழமை (மே9) அறிமுகம் செய்யப்பட் டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் பாலில் செறிவூட்டுதலுக்காக அனுமதிக் கப்பட்ட அளவில் பால் வகை களில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் செறிவூட்டம் செய்யப்பட்ட ஆவின் பசும் பால் வகையினை வாங்கி பயன்டுத்துவ தினால் உடலுக்கு தேவையான வைட்டமின் கிடைக்கப்பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்ட டுள்ளது.