tamilnadu

img

புதிய படிப்பு சென்னை ஐஐடி அறிமுகம்

சென்னை, மே 12- சென்னை ஐஐடி.யில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை என்ற புதிய துறை தொடங்கப்பட்டுள்ளது.  இதில் நாட்டிலேயே முதல் முறையாக பிஎஸ் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் என்ற படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஐஐடி வளாகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் காக்னி சன்ட் நிறுவன இணை நிறு வனர் லட்சுமி நாராயணன், சென்னை ஐ.ஐ.டி. இயக்கு நர் வி.காமகோடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  உயிர்காக்கும் மருத்துவ  உபகரணங்கள், மருந்து  கண்டுபிடிப்பு, மருத்து வத்தில் செயற்கை நுண்ண றிவு அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றை வடிவமைக்கும் வகையில்  மாணவர்கள் தயார்படுத்தப் படுவர். இதற்கான அணுகு முறைகளை இந்த துறை வழங்கும். மேலும் மருத்துவ நடை முறைகளில் தொழில் நுட்பத்தை திறம்பட பயன் படுத்த ஏதுவாக மருத்து வர்களுக்கு பயிற்சி அளிப்ப துடன், நாட்டில் மருத்துவர்- விஞ்ஞானிகளுக்கான அடித்தளத்தை அமைக்கும் பணியையும் இந்த துறை  மேற்கொள்ளும் என்று ஐஐடி இயக்குநர் காம கோடி கூறினார். மேலும் கூறிய அவர், நாட்டில் முதல் முறை யாக பிஎஸ் மருத்துவ அறிவி யல் - பொறியியல் பாடப் பிரிவு தற்போது சென்னை  ஐஐடி.யில் தொடங்கப் பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரி யல் படித்த மாணவர்கள் ஜூலை மாதம் நடைபெறும் ஐஏடி நுழைவுத் தேர்வு எழுதி பிஎஸ் படிப்பில் சேரலாம்.  இந்தப் பாடப்பிரிவுக்கு முதல் கட்டமாக 30 இடங் கள் மட்டும் ஒதுக்கப்பட் டுள்ளன. முற்றிலும் நேரடி வகுப்புகள் மட்டுமே நடத் தப்படும். இணையவழி வகுப்புகள் கிடையாது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.