புதுக்கோட்டை, ஜூன்11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் மாநில அளவிலான இணையதள ஒருங்கி ணைப்புப் பயிற்சி முகாம் ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடை பெற்றது. பயிற்சி முகாமை மத்தியக்குழு உறுப்பி னர் உ.வாசுகி தொடங்கி வைத்தார். ‘சமூக ஊடகத்தின் அரசியல் தாக்கம்’ என்ற தலைப் பில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.கண் ணன், ‘உள்ளடக்கம் மற்றும் எதிர்வினைகள்’ என்ற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பி னர் இரா.சிந்தன் ஆகியோர் பேசினர். ‘தொழில்நுட்பம்-போஸ்டர்‘ டிசைனிங் குறித்து சந்தியா ராகினி, சுதிர் ‘வீடியோ கிராபி‘ குறித்து மதன்ராஜ் ஆகியோர் விளக்கி னர். ‘போலிச் செய்திகள்‘ குறித்து ராம்குமார் மற்றும் பிரேம்குமார் ஆகியோரும் ‘மத்தி யக்குழு வழிகாட்டுதல் ஒருங்கிணைப்பு‘ குறித்து நீலாம்பரன் பேசினார். பயிற்சி முகாமை நிறைவு செய்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரை யாற்றினார். முகாமில் மாநிலம் முழுவதும் இருந்து 70-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.