திண்டுக்கல், மார்ச். 10 திண்டுக்கல் அந்தோணியார் தெருவில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. புதிய நம்பிக்கை அறக் கட்டளையின் சார்பாக நம்பிக்கை பெண்கள் உரிமை கள் நலச்சங்கம் துவக்கவிழா நடைபெற்றது. இந்நிகழ் வையொட்டி உலக மகளிர் தினமும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவி டி.நதியா தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் ஜீவாநந்தினி, பள்ளபட்டி ஊராட்சி 12வது வார்டு உறுப்பினர் ஜான்சிராணி ஆகியோர் கலந்து கொண்டனர். நலிவடைந்த பெண்களுக்கு சலுகை கட்டணத்தில் தையல் பயிற்சி அளிக்க பயிற்சிபள்ளி துவங்கப்பட்டது. அரசுத் துறையில் பெண்களுக்கான சலுகைகளை நமது சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு பெற்றுக் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.