tamilnadu

img

“கவிஞர் தமிழ்ஒளி படைப்புலகம்”

சென்னை, ஏப்.21- கவிஞர் தமிழ்ஒளி பிறந்த நூற்றாண்டு 2023 செப்டம்பர் 21 அன்று தொடங்குகிறது. நூற்றாண்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழு வுடன் இணைந்து சென்னைப் பல் கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை “கவிஞர் தமிழ்ஒளி படைப்புலகம்” எனும் பொருண்மையில் இரண்டு நாட்கள் பன்னாட்டு கருத்தரங்கம் 2023 செப்டம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் நடத்துகிறது.   பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை வாசிக்க விருப்பமுள்ள வர்கள் தங்களைக் குறித்த முழு  விவரத்தையும் தாங்கள் தேர்ந்தெடு க்கும் தலைப்பில் நூறு சொற்களில் கட்டுரைச் சுருக்கத்துடன் பன்னாட்டு கருத்தரங்க வலைத்தளத்தில் (www.kavingarthamizholi100.com) கொடுக்கப்பட்டுள்ள Google Sheet இல் 2023 மே மாதம் 31ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரை யாளர்களின் பெயர் பட்டியல் 2023 ஜூலை 15ம் தேதிக்குள் அறி விக்கப்படும். 2023 செப்டம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் நடை பெறும் பன்னாட்டு கருத்தரங்கில் பங்கேற்று கட்டுரை வாசிக்க, தேர்ந்தெ டுக்கப்படும் அனைவருக்கும் உரிய அழைப்பு அனுப்பப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் நூலாகத் தொகுத்து வெளியிடப்படும். மின்னஞ்சல்: thamizholi100@gmail.com தொலைபேசி: +91 96772 51140 வலைதளம்: www.kavingarthamizholi100.com மேலும் விவரங்கள் அறிய பன்னாட்டுக் கருத்தரங்க வழிநடத்தும் குழுவின் செயலாளர் முனைவர் தா. ஜான்சன் வெஸ்லி அவர்களைத் தொடர்புக் கொள்ளலாம் என கருத்தர ங்க வழி நடத்தும் குழு தலைவர் முனைவர் கோ.பழனி விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார்.