நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வர் அறிவிப்பு
சென்னை, ஜூன் 2 - சென்னையில் கலைஞர் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப் படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும் திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் முத லமைச்சருமான கலைஞர் கருணாநிதி யின் பிறந்தநாள் சனிக்கிழமை (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின் 100ஆவது பிறந்தநாள் என்பதால் ஆண்டு முழுவதும் தமி ழ்நாடு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான நூற்றாண்டு தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் வெள்ளியன்று (ஜூன் 2) நடைபெற்றது. நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்து பார்வையிட்டு, நூற்றாண்டு விழா இலச்சினையை வெளி யிட்டார். மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக ஆற்றிய பணிகள், நிறை வேற்றிய திட்டங்கள் குறித்த குறும் படத்தையும் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ நாங்கள் திராவிட இயக் கத்தை சார்ந்தவர்கள் என்றாலும் காந்தி யடிகள் இயக்கத்துடன் எங்களுக்கு தொடர்பு உண்டு என்பதை அறிந்தவர் கோபாலகிருஷ்ண காந்தி. பெரியார் சுய மரியாதை இயக்கத்தை தொடங்கும் முன்பு காங்கிரசில் காந்தியின் தொண்ட ராக இருந்தார். கோட்சேவால் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது பெரியார் மன வேதனை அடைந்தார். பெரியார், அண்ணா, கருணாநிதி மீது மதிப்பு கொண்டவர் கோபால கிருஷ்ண காந்தி. கோபாலகிருஷ்ண காந்தி இங்கு வந்து பேசியது என் வாழ்நா ளில் கிடைத்துள்ள மாபெரும் பேறு என்றும் அந்த பெயரை காப்பாற்றும் வகையில் நான் நடந்து கொள்வேன். மக்கள் மனங்களில் இன்றும் கரு ணாநிதி வாழ்கிறார். தனது தலைமையி லான திராவிட மாடல் அரசை கரு ணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன் எனக் கூறிய அவர், கருணாநிதி திமுக வின் சொத்து அல்ல என்றும், உலகத் தமிழர்களின் சொத்து என்றும் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டில்தான் தொழில் தொடங்குவோம் என சிங்கப்பூர், ஜப்பான் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ள தாக தெரிவித்த அவர், உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு மையம் சென்னை யில் அமைக்கப்படும் என தெரிவித்தார். 25,000 ஏக்கர் பரப்பளவில் 5,000 பார்வை யாளர்கள் அமரும் வகையில் சர்வதேச பன்னாட்டு மையம் அமையும் என்றும், உலகளாவிய தொழில் கண்காட்சிகள், திரைப்பட நிகழ்வுகள் அங்கு நடை பெறும் எனவும் முதலமைச்சர் ஸ்டா லின் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி, பேரன்களுக்கு பெயருண்டு என்றும், அந்த பெயரை காப்பாற்றுவது பெரிய வேலை என்றும் தெரிவித்தார். தான் ஒரு சாதாரண மனிதன் என்றும், அரசியலில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்ட அவர், அடங்காத அமைதியின் உருவகம் மு.க.ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மக்கள் பார்வையிடும் வகை யில் இந்த புகைப்படக் கண்காட்சி ஜூன் மாதம் முழுவதும் நடைபெறுகிறது.