மதுரை, அக்.26 - மதுரை மாநகர் செல்லூர், மீனாம் பாள்புரம், புதூர், மகாத்மா காந்தி நகர், நாராயணபுரம் ஆத்திகுளம் ஆகிய பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பெய்த மழை மற்றும் வெள்ளியன்று பெய்த கனமழையால் கண்மாய் களுக்கு நீர் வரத்து அதிகரித்து மறு கால் பாய்ந்து அவை குடியிருப்புப் பகுதி களுக்கு புகுந்தது. குறிப்பாக செல்லூர் கண்மாய், ஆனையூர் கண்மாய் நிரம்பி அவை பந்தல்குடி கால்வாய் வழி யாக வெளியேறி பட்டுக்கோட்டை கல்யா ணசுந்தரம் வீதி, கட்டபொம்மன் நகர் மற்றும் செல்லூர் 50 அடி, 60 அடி சாலை பகுதிகளை ஒட்டிய அகிம்சாபுரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான வீடு களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அதேபோல் ஆனையூர் கண்மாயி லிருந்து வெளியேறும் நீர் முல்லை நகர், ஆபீசர் டவுன் மற்றும் அதன் விரி வாக்கப் பகுதியான பாலமுருகன் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரக்க ணக்கான வீடுகளில் புகுந்துள்ளது. இத னால் அப்பகுதி மக்கள் சிலர் முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகமும் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளன.
1993-நிலை வருமோ?
இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூறுகையில், 1993 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு பெரிய மழையை இப் போதுதான் பார்க்கின்றோம். குறிப்பாக இப்பகுதிகளில் உள்ள மழை நீர் கால் வாய்கள் 10 ஆண்டுகளாக சீரமைக்கப் படாமலேயே உள்ளன. கால்வாய்கள் அனைத்திலும் பிளாஸ்டிக் கழிவுகளும் மதுபான பாட்டில்களும், மினரல் வாட்டர் பாட்டில்களும் அதிகம் கிடக்கின்றன. இத னால் பொதுமக்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக பந்தல் குடி வாய்க்கால் முறையாக பராமரிக்கப் படாததால் அதில் வரும் தண்ணீர் வைகை ஆற்றுக்கு செல்ல முடியாமல் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இன்னும் இரண்டு தினங்கள் இதே போல் மழை பெய்தால் 1993 ஆம் ஆண்டு எப்படி செல்லூர் பகுதி மிதந் ததோ அந்த நிலை வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இப்போதும் கூட அமைச்சர், அதிகாரிகள் என்று வந்து பார்த்துச் சென்றுள்ளார்கள். உரிய நட வடிக்கை மேற்கொண்டால் மக்கள் பாது காப்பாக இருப்பார்கள். உணவு இல்லா மலும் சுகாதாரமான குடிநீர் இல்லாம லும் தவிக்கின்றோம். அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் கூறினார்கள். அதேபோல் தீபாவளி நேரம் என்ப தால் வேலைக்கு செல்ல முடியாமல் பலரும் திண்டாடும் நிலை உள்ளது. குறிப் பாக இப்பகுதிகளில் உள்ளவர்கள் தினக்கூலி மற்றும் வாரச்சம்பளம் வாங்கும் தொழிலாளர்களாகவே இருக் கின்றோம். அரசு எங்களுக்கு சரியான தீர்வு காண வேண்டும் என்றனர்.
மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
மகாத்மா காந்தி நகர் பகுதியிலும் சில இடங்களில் மழைநீர் வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் தெருப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. ஆத்திகுளம் பகுதியில் உள்ள நாகனாகுளம் வாய்க் கால் ஏஞ்சல் நகர், அங்கயர்கண்ணி மெயின் ரோடு, நாராயணபுரம் ஐலேண்ட் நகர் காந்திபுரம் விரிவாக்கம் - தமிழ் நகர், மகாலட்சுமி நகர், பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளியன்று பெய்த கனமழை மற்றும் அதற்கு முன்னதாக இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் பெய்த கனமழை காரண மாக இப்பகுதிகளை சுற்றியுள்ள கண்மாய் கள் விரைவில் நிரம்ப ஆரம்பித்தது. கண்மாயில் நிரம்பும் நீர் வெளியேற முடியாமல் இந்தப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புப் பகுதி களில் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் தண்ணீர் வெளியேறுவதற்கு தற்சம யம் வாய்க்கால்களை அமைத்து வெளி யேற்றி வருகிறார்கள். தொடர்ந்து மாநக ராட்சி, மாவட்ட நிர்வாகமும் இப்பகுதி களில் உள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் மிகப்பெரும் பிரச்சனைகளை இப்பகுதி யில் உள்ளவர்கள் சந்திக்கும் நிலை ஏற்படும். மழை நீர் வாய்க்கால் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி தெருக்களி லும் வீடுகளிலும் தேங்கி நிற்கும் அவ லம் ஏற்பட்டுள்ளது.
பாதாளச் சாக்கடை வசதியில்லை
இப்பகுதியில் உள்ள மக்கள் கூறுகை யில், எங்கள் பகுதிகளில் பாதாளச் சாக்கடை வசதி இல்லை. அதேபோல் மழை நீர் வாய்க்காலை ஆக்கிரமித்து வீடு கள் கட்டியுள்ளார்கள். அவற்றை முறைப் படுத்த வேண்டும். நாகனாகுளத்தில் இருந்து வெளியேறும் நீர் காந்திபுரம் அருகில் உள்ள கோசாகுளம் புதூர் கண்மாயில் நிரம்பும். இப்பகுதியில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் தான் தற்போது ஆயிரக்கணக்கான குடி யிருப்புகள் தண்ணீரில் தத்தளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கண்மாய்களும் முறைப்படி தூர்வார வேண்டும் என்றும் கூறினார்கள். தொடர்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளதால் சமையல் செய்ய முடியவில்லை. இரவு நேரங்களில் தூங்க முடியவில்லை. விரைவில் தண் ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். சிபிஎம், வாலிபர் சங்கம் உணவு ஏற்பாடு பாதிக்கப்பட்ட மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடே சன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தங்குவதற்கும் உணவுக் கும் ஏற்பாடை செய்ய சொல்லி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களிடம் கூறினார். அருகில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி குழு செயலாளர் ஏ. பாலு தலைமையில் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், பகுதி குழு உறுப்பினர்கள் ஜாஹிர், முத்து, சரவணகுமார், கணேசன், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் டி. செல்வா, பொருளாளர் எஸ். வேல் தேவா, பகுதி குழு செயலாளர் பிரசாத், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டேவிட் ராஜதுரை, செயலாளர் டீலன், மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு காலையில் சுமார் 350 நபர்களுக் கும் மதியம் 660 பேருக்கும் உணவு வழங்கியுள்ளார்கள். தொடர்ந்து அவர்களிடம் கூறிய மக்கள், மீனாம்பாள்புரம் பகுதியில் இருந்து பந்தல்குடி வரை செல்லும் பந்தல்குடி வாய்க்கால் கரையோர பகுதிகளில் நிரந்தரமாக தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். மேலும் தற்போது தண்ணீர் முழுமையாக வெளியேறு வதற்கு உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள தாங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் ஆய்வு கனமழை காரணமாக மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை அமைச்சர்கள் பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மேயர் இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் தி. நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், வெங்கடேசன் மற்றும் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டனர்.