தருமபுரி, மார்ச் 6- மாற்றுத்திறனாளிகள் குடும்பத் திற்கு இலவச மனைபட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நல சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தருமபுரி ஒன்றிய 4 ஆவது மாநாடு தரு மபுரி முத்து இல்லத்தில், ஒன்றிய தலை வர் க.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கே.ஜி.கரூரான் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் கே.சுசீலா, பொருளாளர் ஏ.சரஸ்வதி ஆகியோர் வேலையறிக் கையை சமர்பித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் ஜி.தமிழ் செல்வி வாழ்த்து ரையாற்றினார். இம்மாநாட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தில் மாற்றுத்திறனாளிகள் அனை வருக்கும் முழு ஊதியத்துடன் கூடிய வேலை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் குடும்ப அட்டை களை, ஏஏஒய் அட்டைகளாக மாற்ற வேண்டும். ஒருகால் ஊனமுற்று கடும் பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளி களுக்கு இலவச மூன்று சக்கர பெட் ரோல் வாகனம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குடும்பங்க ளுக்கு இலவச மனைபட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தருமபுரி ஒன்றிய தலைவராக திரு ஞானம், ஒன்றிய செயலாளராக கே. சுசிலா, பொருளாளராக சஞ்சீவன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. இதில், மாவட்ட உதவித் தலைவர் எம்.மாரி முத்து, ஒன்றிய துணைச் செயலாளர் மீனாட்சி அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.