சென்னை, ஜன. 19- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அனை த்துக் கட்சிகளும் வலியுறுத்தின. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 498 பேரூ ராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்ட மிட்டுள்ளது. இதற்காக வார்டு வாரி யாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது போன்ற பணிகளை தேர்தல் ஆணை யம் முடுக்கி விட்டது. இதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வார்டு எண்ணிக்கையை இறுதி செய்யும் பணிகள் கடந்த வாரம் முடிந்த நிலை யில் திங்களன்று இது பற்றிய விவரங் களை அதிகாரப்பூர்வமாக அரசி தழிலும் வெளியிட்டது. இந்த இட ஒதுக்கீடு அடிப்படை யில் வார்டுகளும் வரையறை செய் யப்பட்டுள்ளன. எந்தெந்த மாநகராட்சி கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் இட ஒதுக்கீடுபடி பிரிக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 11 மாநகராட்சி மேயர் பதவி கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள் ளது. இதில் சென்னை, தாம்பரம் மாநக ராட்சிகள் ஆதி திராவிடர் பெண்களுக் காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி ஆதிதிராவிடர் பொது பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 மாநக ராட்சி மேயர் பதவிகள் பொது பெண் களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு இட ஒதுக்கீடுபடி வார்டுகள் முழுமையாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களு டனும் மாநில தேர்தல் ஆணையர் பழ னிக்குமார் ஏற்கனவே 5 கட்டங்களாக ஆலோசனை நடத்தி முடித்துள்ளார். தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளை அமைத்தல், மின்னணு எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது, பதட்டமான வாக்குச் சாவடிகளை கண்டறிதல், அதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அர சியல் கட்சி கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் அணையகத்தில் தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் புதனன்று (ஜன. 19) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிரிராஜன்(திமுக), என்.குணசேகரன், ஏ.ஆறுமுக நாயினார் (சிபிஎம்), மு.வீரபாண்டியன், ஏழுமலை (சிபிஐ), பொள்ளாட்சி வி. ஜெயராமன், பால்மனோஜ் பாண்டி யன் (அதிமுக)உள்ளிட்ட உள்ளிட்ட 11 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சிகளும்,“ கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை அமல் படுத்தி ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும், தேர்தல் தேதி உடனே அறிவிக்க வேண்டும், பிரச்சார கூட்டத் திற்கான காவல் துறை கட்டுப்பாடு களை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தின.
கொரோனா தினசரி இரவு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுவதால் பிரச்சாரக் கூட்டங்கள் இரவு 10 மணிக்குதான் முடிவடையும். ஞாயிறு பொதுமுடக்கம் இருப்பதால் பிரச்சாரம் தடைபடாமல் இருக்க வேண்டும் என்றும் மேயர் மற்றும் நகராட்சி, பேரூ ராட்சி தலைவர் தேர்வை நேரடியாக நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையே, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நகர்ப்புற உள்ளாட்சித் அமைச்சர் கே.என். நேரு, “தேர்தலை நடத்த மாநில அரசு தயாராக உள்ளது. தேர்தல் தேதியை ஆணை யத்துக்கு கொடுத்துவிட்டோம். இனி தேர்தல் எப்போது என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் தெரிவிக்க வேண்டும்” என்றார். இதனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி எந்த நேரத்தில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.