tamilnadu

img

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்

சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குழுவின் மாவட்ட கன்வீனர் ஜி.செல்வி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின், மாவட்ட துணைத்தலைவர் கருணாநிதி, மாவட்டப் பொருளாளர் ரங்கராஜ் ஆகியோர் விலை உயர்வைக் கண்டித்து உரையாற்றினர். தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒன்றிய அரசைக் கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினர் வேணி, கொளஞ்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.