கடலூர்,செப்.29- புதுமைப் பெண்களின் வீறு நடை யுடன் தொடங்கிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16 வது மாநில மாநாட்டின் பேரணி யால் எழுச்சிக்கோலம் பூண்டது கடலூர் மாநகரம். ‘வன்முறையை வேரறுப்போம், பெண்ணுரிமையைப் பாது காப்போம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் 16 ஆவது மாநில மாநாடு கடலூர் மாநகரில் செப்டம்பர் 29, 30, அக்டோபர் 1 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறு கிறது. 16 வது மாநாட்டைப் பறைசா ற்றும் வகையில் மாநாட்டு ஊர்வ லம் கடலூர் சாவடியிலிருந்து துவ ங்கியது. 16 கொடிகளுடன் சீருடை அணிந்த பெண்கள் அணிவகுக்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சகோதர வாழ்த்து!
வழிநெடுகிலும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், விவசாய தொழி லாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், சிஐடியு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் வாழ்த்தி வரவேற்றனர். செம்மண்டலத்தில் குடியிருப் போர் நலச் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர். மேலும் பல்வேறு அமைப்பு களின் சார்பில் வாழ்த்தி வரவேற்று கோஷம் எழுப்பினர். காய்கறி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் ஊர்வ லத்தில் பங்கேற்ற பெண்கள் காய் கறிகளை மாலையாக கோர்த்து அணிவகுத்து வந்தனர். இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. சமையல் எரிவாயு உரு ளையை சில பெண்கள் தலையில் சுமந்த படி வந்தனர்.
மாதர் சங்கத்தின் இந்த ஊர் வலத்தில் கள்ளக்குறிச்சி தனியார் பள் ளியில் மரணமடைந்த ஸ்ரீமதியின் தாயாரும் கலந்து கொண்டு வெண் கொடியேந்தி வந்தார். அகில இந்திய துணைத் தலை வர் சுதா சுந்தரராமன், மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் பி. சுகந்தி, மாநில துணைத் தலைவர்கள் கே. பாலபாரதி, என்.அமிர்தம், மாநிலச் செயலாளர்கள் வி.பிரமிளா, எஸ். கே.பொன்னுத்தாய், ஏ.ராதிகா, மாவட்டத் தலைவர்கள் பி. தேன்மொழி, பி.மல்லிகா, வி.மேரி, பி.மாதவி உள்ளிட்டோரும் பேர ணியின் முகப்பில் அணி வகுத்த னர். செம்மண்டலம் வழியாக மஞ்சக்குப்பம் பொதுக்கூட்டம் மைதானத்தை பேரணி அடைந்தது.
பொதுக்கூட்டம்
இதனைத் தொடர்ந்து மஞ்சக் குப்பம் மைதானத்தில் தோழர் ஆர். பிருந்தா நினைவு திடலில் நடந்த மாநில மாநாட்டின் துவக்க பொதுக்கூட்டம் வரவேற்புக்குழுத் செயலாளர் பி.தேன்மொழி தலை மையில் நடைபெற்றது. அகில இந்திய பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே சிறப்புரையாற்றினார். உ.வாசுகி, சுதாசுந்தரராமன், திரைக் கலைஞர் ரோகிணி, மாநக ராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகி யோர் உரையாற்றினர். முன்னதாக, புதுகை பூபாளம் குழுவினரின் நையாண்டி தர்பார், திண்டுக்கல் சக்தி குழுவின் தப்பாட்டம், புதுவை சப்தர்ஹஷ்மி, காம்ரேட் டாக்கீஸ் குழுவின் கேங்ஸ்டார் கிராமிய இசை நிகழ்ச்சி, பரதநாட்டியமும் நள்ளி ரவு வரை நடைபெற்றது.