சென்னை, மார்ச் 12- சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் சுகாதார வல்லுநர்களுடன் இணைந்து நம்பக மான சுகாதாரத் தகவலை பத்திரிகை யாளர்கள் வழங்க வேண்டும் என இந்து என்.ராம் கேட்டுக்கொண்டார் சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் மருத்துவர் வி.சாந்தா 2ஆம் ஆண்டு நினைவையொட்டி ‘புற்றுநோய் மற்றும் ஊடகங்களின் பங்கு மற்றும் பொறுப் புகள்’ என்ற தலைப்பில் நடந்த கருத்த ரங்ககில் இந்து என்.ராம் பங்கேற்று உரை யாற்றினார். 1954ஆம் ஆண்டு 12 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகத் தொடங்கப் பட்ட ‘தி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில்’ மருத்து வர் சாந்தா ஒரு முன்னோடி நிபுணராகத் திகழ்ந்தார். தனது வாழ்நாளில் 60 வரு டத்திற்கும் மேலாக புற்றுநோயைக் கட்டுப் படுத்துவதற்கும், தடுப்பதற்குமே அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். திரைப்படங்களில் புற்றுநோயை குணப்படுத்த முடியாதது,
மரணம்தான் முடிவு என்று கூறப்பட்டாலோ அல்லது புற்று நோயைக் குணப்படுத்துதல் அல்லது கட்டுப் படுத்துதல் பற்றிய தவறான அறிக்கைகள் செய்தித்தாள்களில் வந்தாலோ சம்பந்தப்பட் டவர் களை மருத்துவர் சாந்தா உடனடியாக தொடர்பு கொண்டு விளக்கமளிப்பார். பத்திரிக்கை மற்றும் மருத்துவம் போன்ற துறைகளுக்கிடையே இணக்கமான மற்றும் விமர்சன தொடர்புகளை கொண்டு வரு வதற்கு அறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் உதவியை நாட வேண்டும் என்று அவர் கூறு வார். மருத்துவர்கள், பொருளாதார வல்லு நர்கள், மானுடவியலாளர்கள் மற்றும் அறிவி யல் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட வல்லு நர்கள் வெகுஜன தகவல்தொடர்புக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தலைவர் சேஷசாயி, செயல் துணைத் தலைவர் இ.ஹேமந்த்ராஜ், புற்று நோய் ஆராய்ச்சி நிலையத்தின் இயக் குநர் செல்வலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.