tamilnadu

img

கண்ணூர் பல்கலை. மாணவர் பேரவை தேர்தல்

கண்ணூர், ஜூன் 21- கே எஸ் யூ- எம் எஸ் எப்- ஏபிவிபி - ஊடகங்கள் நடத்திய பொய்ப் பிரச்சாரங்களை தகர்த்து தொடர்ந்து 24 ஆவது முறையாக கண்ணூர் பல்கலைக்கழக மாணவர்  பேரவையை இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) கைப்பற்றியது. அனைத்து இடங்களிலும் எஸ்எப்ஐ வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.  மொத்தம் 120 கவுன்சிலர்களில் 108 பேர் வாக்களித்தனர். அதில் 70 வாக்குகளை எஸ்எப்ஐ பெற்றது. கண்ணூர் பல்கலைக்கழக மாங்காட்டுபரம்பு வளாகத்தைச் சேர்ந்த டி.பி.அகிலா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேஎஸ்யூ வேட்பாளர் ஜெஃபின் பிரான்சிஸ் 35 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அகிலாவுக்கு 70 வாக்குகள் கிடைத்த நிலையில் ஜெஃபின் பிரான்சிஸ் அதில் பாதி வாக்குகள் மட்டுமே பெற்றார். டி. பிரதிக் 32 வாக்குகள் அதிகம் பெற்று பொதுச் செயலாளராக வெற்றி பெற்றார். பிரதிக் 70 வாக்குகளையும், எம்எஸ்எப் வேட்பாளர் வி.முஹம்மது 38 வாக்குகளையும் பெற்றனர். துணைத்தலைவராக கூத்துபரம்பு எம்இஎஸ் கல்லூரியின் முகமது ஃபவாஸ், பெண் துணைத்தலைவராக பையனூர் கல்லூரி அனன்யா ஆர்.சந்திரன் ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர்.  முதல் கட்ட தேர்தலில் கூட்டணி இல்லை என அறிவித்து கே.எஸ்.யு மற்றும் எம்.எஸ்.எப் ஆகிய அமைப்புகள் தனித்தனியாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தன. கே.பி.சி.சி. தலைவர் கே.சுதாகரன் கலந்துரையாடல்களை நடத்தி, கேஎஸ்யு மற்றும் எம்எஸ்எப்-ஐ தேர்தல் களத்தில் கொண்டு வந்தார், ஆனால் அது எஸ்எப்ஐயின் வெற்றிக்கு முன்னால் மண்ணை கவ்வியது.