tamilnadu

img

இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநில மாநாடு சேலத்தில் துவங்கியது

சேலம், டிச.18- இந்திய வங்கி ஊழியர் சம்மேள னத்தின் 13 ஆவது மாநில மாநாடு சேலத்  தில் மாநில தலைவர் தி.தமிழரசு தலை மையில் நடைபெற்றது.  முன்னதாக சூரமங்கலம் பகுதியில் இருந்து வங்கி ஊழியர்கள் பங்கேற்ற பிரம்பான பேரணி நடைபெற்றது. பொது மாநாட்டில் வரவேற்புக் குழு தலைவர் டி.உதயகுமார் வரவேற்புரையாற்றினார், சங்கத்தின் பொதுச்செயலாளர் தேப சிஸ் பாசு சௌத்ரி மாநாட்டை துவக்கி வைத்தார். சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர ராசன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். தொடர்ந்து பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. மாநாட்டையொட்டி மாநில பொதுச் செயலாளர் என். ராஜகோபால் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொதுத்துறை வங்கிகளை தனி யார் மையமாகக் கூடாது.

அரசின் குறிக் கோள் தனியார் மையம் படுத்துவதே முக்கிய நிகழ்வாக உள்ளது. அதனை தடுப்பதற்காக வங்கி ஊழியர்கள் பொது துறையை பாதுகாப்போம் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகி றோம். பொதுமக்களும் வங்கி ஊழியர் களுடன் சேர்ந்து பொதுத்துறை வங்கி களை பாதுகாக்க வேண்டும் என்றார். திங்களன்றும் மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது. மாநாட்டின் ஒருபகுதி யாக பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகளிர் துணைக் குழு ஒருங்கிணைப்பா ளர் எஸ். ஷோபனா வாழ்த்திப் பேசி னார். வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பெண்கள் உப குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரேமலதா அறிக்கை சமர்ப்பித்துப் பேசினார். மாலை சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. இதில் சங்கத்தின் செயலாளர் கே.கிருட்டினன், இணை செயலாளர் சி.பி. கிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மாவட்டச் செயலாளர் எஸ். தீனதயாளன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.