tamilnadu

img

வங்கிக் கிளைகளில் பெண் ஊழியர்களுக்கு தனி கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்

மதுரை, செப்.23 - இந்தியன் வங்கி ஊழியர் அசோசி யேசன் தமிழ்நாடு சங்கத்தின் மதுரை  மைய பெண்கள் சிறப்பு மாநாடு  ஞாயிற்றுக்கிழமை மாட்டுத்தாவணி யில் நடைபெற்றது. மாநாட்டை சங்கத்தின் செயலாளர்  திவ்யா சம்பத்குமார் தலைமையேற்று நடத்தினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் சுகந்தி சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டார். குடும் பங்களில் பெண்கள் மேல் நடத்தப்ப டும் அடக்குமுறைகள் குறித்தும், பணி யிடங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்ச னைகள் மற்றும் பெண்கள் மீதான பாலி யல் வன்கொடுமைகள் குறித்தும் பேசி னார். பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரா கவும், வங்கிக் கிளைகளில் பெண் ஊழி யர்களுக்கு தனியாக கழிப்பறை வசதி கள் செய்து கொடுக்க வலியுறுத்தியும், பெண் ஊழியர்கள் விடுப்பு எடுப்பதில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும், பெண் ஊழியர்களின் பணிச்சூழல் சார்ந்த சிக்கல்கள் குறித்தும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் பெண்கள் உபகுழு அமைப்பாளர் சிவசாரதா தேவி, சங்கத் தின் முன்னாள் பொதுச் செயலாளர் க. கிருட்டிணன், அகில இந்திய சம்மே ளன பொதுச் செயலாளர் ஹரிராவ், மாநிலத் தலைவர் கணேசன், பொதுச்  செயலாளர் சுனில்குமார் உள்ளிட் டோர் பேசினர். இம்மாநாட்டில் மதுரை, திரு நெல்வேலி, காரைக்குடி, திருச்சி, கும்ப கோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்ட லங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிக மான வங்கி பெண் ஊழியர்கள் கலந்து  கொண்டனர்.