சிவகங்கை, ஜூன் 10- கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் புதிதாக பச்சை நிற பாசிகள் அதிகளவில் கிடைத்துள்ளன. கோடை விடுமுறை என்பதால் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் அரசு சார்பில் தற்போது 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடி மட்டுமன்றி, அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. இதில் கண்ணாடி பாசிமணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் மணிகள், காதணிகள், சங்கு வளையல்கள் உட்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில், புதிதாக தோண்டப் பட்ட குழியில் பச்சைநிற பாசிகள் கண்டெடு க்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை என்ப தால் 7-ம் கட்ட அகழாய்வு நடந்த இடம் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப் பட்டுள்ளது. அகழாய்வு நடந்த இடங்களை யும், 2,600 ஆண்டுகளுக்கு முன்பு தந்தத்தால் செய்யப்பட்ட பகடை உள்ளிட்ட அரியவகை பொருட்களையும் ஏராளமானோர் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். கீழடியில் இதுவரை நடந்த அகழாய்வுப் பொருட்களில் இதுவரை மத ரீதியான அடையாளமோ, மத சின்னங்களோ கண்டறி யப்படவில்லை. செப்டம்பருடன் 8-ம் கட்டப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில் அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வரு கின்றன.