tamilnadu

img

ஜி-ஸ்கொயர் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை,ஏப்.24- ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொண்டுவரும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவல கங்களில் வருமான வரித்  துறையினர் திங்களன்று  (ஏப்.24) அதிகாலையி லிருந்து சென்னை, கோவை,  திருச்சி உள்ளிட்ட இடங்க ளில் சோதனையில் ஈடுபட்ட னர்.  சென்னையில் சேத்துப் பட்டு ஹாரிங்டன் சாலை, ஆழ்வார்பேட்டை, திருச்சி கண்டோன்மென்ட் பகுதி, கோவை - பீலமேடு, அவி நாசி சாலையிலுள்ள அலுவ லகம், மஹேந்திரா பம்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஹேந்திரா ராமதாஸின் கோவை - புலியக்குளம் வீடு, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் இந்த சோதனை நடை பெற்றது. இதேபோல் கர்நாடகா மற்றும் தெலுங் கானாவிலும் உள்ள ஜி- ஸ்கொயர் நிறுவனங்க ளில் சோதனை மேற்கொள் ளப்பட்டது.

ஜி-ஸ்கொயர் விளக்கம்

இது தொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், “தங்கள் நிறுவனம் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யா னவை என்றும் அண்ணா மலையின் இந்தக் குற்றச் சாட்டுகளால் பல ஆண்டு  உழைப்பில் பெறப்பட்ட  தமது வாடிக்கையாளர் களின் நம்பிக்கை சிதைக் கப்பட்டுள்ளதாகவும் தெரி வித்துள்ளது. மேலும், தங்களது நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.38,000 கோடி என அண்ணாமலை வெளியிட்ட தகவல் தவறு என்றும், தங்களது கட்டுமானத் திட்டங்கள் பலவும் பிற  நிறுவனங்களின் கூட்டு  முயற்சியோடு செயல் படுத்தப்பட்டு வருவதாக வும் ஜி-ஸ்கொயர் தெரிவித்துள்ளது

எம்எல்ஏ., ஆடிட்டர் வீடுகளிலும்...

முதல்வர் மு.க.ஸ்டாலி னின் மருமகன் சபரீசனின் ஆடிட்டர் சண்முகராஜ், உற வினர் பிரவீன், அண்ணா நகர் தொகுதி திமுக எம்எல்ஏ மோகன் வீடுகள், அவரது மகனின் அலுவலகம் ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகங்களில் வருமான வரி துறை சோதனை நடைபெற்றது. பாதுகாப்புப் படை சென்னை அண்ணாநகர் திமுக எம்எல்ஏ மோகன் மற்றும் அவரது மகன் வீட்டி லும் சோதனை நடத்திய போது எதிர்ப்பு தெரிவித்து  திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து மத்திய பாதுகாப்புப் படையி னரின் பாதுகாப்பு போடப் பட்டது.