tamilnadu

img

மாநிலப்பட்டியலுக்கு கல்விவர சட்டத்திருத்தம் வேண்டும்

மல்லுஸ்வராஜ்யம் நகர்/ஐதராபாத், டிச.14- மாநிலப்பட்டியலில் கல்வியை கொண்டுவர சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று நீதிபதி சந்துரு கூறினார். பிரதிநிதிகள் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். கல்வித்துறையில் எதிர்கால போராட்டங்களை முன்னெடுப்ப தற்காக இந்திய மாணவர் சங்கத் தின் 17ஆவது அகில இந்திய மாநாடு ஐதராபாத்தில் செவ்வா யன்று (டிச.13) துவங்கியது. பிரதிநிதிகள் மாநாட்டைத் துவக்கி வைத்து நீதிபதி சந்துரு பேசியதாவது: கடப்பாரை மூலம் பாபர் மசூதியை இடித்தவர்கள் புல்டோ சரை தங்கள் அடையாளமாக்கி நாட்டை ஆட்சி செய்கிறார்கள். இந்திரா காந்தி அவசரநிலையை அறிவித்து அரை பாசிச ஆட்சி யை அமல்படுத்தினால், சங்பரி வார் அறிவிக்கப்படாத அவசர நிலையை அமல்படுத்துகிறது. கோகினூர் வைரத்தை ஆங்கி லேயர்கள் கடத்திச் சென்றதுபோல், இந்தியாவின் நவரத்தினங்களான பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு கூறினார். இந்திய மாணவர் சங்க மாநாட்டை துவக்கி வைத்து மேலும்  அவர் பேசுகையில், கேரளத்திலும்  தமிழ்நாட்டிலும் தெலுங்கானா விலும் ஆளுநர்கள் மூலம் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றார். பல்கலைக் கழகங்களில் விரும்பத்தகாத தலையீடுகளை செய்கிறார்கள். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர அரச மைப்பு சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் 1970 இல் நடந்த எஸ்எப்ஐ முதல் மாநாட்டில் நான் தமிழ்நாடு பிரதிநிதி யாக பங்கேற்றேன். எஸ்எப்ஐ-யில் செயல்பட்டது வழக்கறிஞர், நீதிபதி ஆகிய நிலைகளில் செயற் பாட்டுக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

மாணிக் சர்க்கார்

முன்னதாக, உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மல்லுஸ்வராஜ்யம் நகரில் அபிமன்யு - தீரஜ் - அனீஸ் கான் அரங்கில் (தாகூர் ஹால்) எஸ்எப்ஐ முதல் அகில இந்திய துணைத் தலைவரும், திரிபுராவின் முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்கார் பொது மாநாட்டைத் துவக்கி வைத்தார். 

தீரஜ், அனீஸ்கான்  தியாகச் சுடர்கள்'

முன்னதாக தியாகச்சுடர் ஊர்வலங்களுக்கு திங்களன்று ஐதராபாத் மத்திய பல்கலைக்கழ கத்தில் அகில இந்திய தலைமை சார்பில் வரவேற்பு அளிக்கப் பட்டது. தியாகச்சுடர் ஊர்வலங்கள் இடுக்கி பொறியியல் கல்லூரி வளாகத்தில் இருந்து தியாகி தீரஜ், மேற்கு வங்கமாநிலத்தில் இருந்து தியாகி அனீஸ்கான் ஆகி யோர் பெயரில் கொண்டவரப் பட்டன. செவ்வாயன்று காலை மாண வர்களின் மாபெரும் பேரணி நடை பெற்றது. மாலை 5 மணிக்கு எஸ்எப்ஐ தலைவர் வி.பி.சானு கொடி ஏற்றினார். 

டீஸ்டா செதல்வாத்

பிரதிநிதிகள் மாநாட்டை நீதிபதி சந்துரு, சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாத் ஆகியோர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.  தீரஜின் அப்பாவும், அனீஸ்  கானின் சகோதரரும் மாநாட்டில் கலந்து கொண்டனர். பொதுச்செய லாளர் மயூக் பிஸ்வாஸ் வேலை அறிக்கையை தாக்கல் செய்தார். இம்மாநாட்டில் 25 மாநிலங்களில் இருந்து 720 பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஜம்மு-காஷ்மீர் மாணவர் சங்கம், பழங்குடியின மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் எஸ்எப்ஐ உடன் இணைந்த இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து பிரிவுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற னர். கியூபா, வங்கதேசம், பாலஸ்தீன ஒற்றுமை இயக்கம் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், வர்க்க- வெகுஜன அமைப்புகளின் தலை வர்கள் மற்றும் பல்வேறு ஜனநா யக அமைப்புகளின் தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநாட்டின் ஒருபகுதியாக இடதுசாரி மாணவர் அமைப்புகளின் ஒற்றுமை மாநாடும் நடைபெறும். 16ஆம் தேதி நிர்வாகிகள் தேர்வுடன் மாநாடு நிறைவடைகிறது.