tamilnadu

img

வாரணாசியில் மகாகவி பாரதியார் சிலை

சென்னை. டிச. 11- தமிழக அரசின் சார்பில் உத்திரப் பிரதேசம் மாநிலம், வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை புனரமைப்பு செய்து, நினைவு இல்லத்தினையும் அதில் அமைக்கப்பட்டுள்ள அவரது மார்பளவுச் சிலையினையும் முதல்வர் ஸ்டாலின் ஞாயிறன்று (டிச.110   காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து, மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரையும் வெளியிட்டார். இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில்,  உத்திரபிரதேசம் மாநிலம், வார ணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டினை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு, வீட்டின் உரிமை யாளருடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வீட்டின் ஒரு பகுதி ரூ. 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, அதில் அன்னாரின் மார்பளவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது. நினைவில்லத்தில் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப் படங்களும், வாழ்க்கை குறிப்பும், அவரது படைப்புகளும், சிறு நூலக மும் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் புனரமைக்கப்பட்டுள்ள பாரதியார் வாழ்ந்த நினைவு இல்லத்தினையும் அதில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது மார்பளவுச் சிலையினையும் முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், மகாகவி பாரதியார் குறித்த குறும்படத்தினை முதல்வர் பார்வையிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறையில் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.