வயநாடு, ஜன.21- அனைத்து பழங்குடியின மக் களுக்கும் ஆதார் அட்டைகள், ரேஷன் கார்டுகள், பிறப்பு/இறப்பு சான்றிதழ் கள், தேர்தல் அடையாள அட்டைகள், வங்கிக் கணக்குகள் மற்றும் சுகாதார காப்பீடு போன்ற அடிப்படை ஆவணங் கள் மற்றும் வசதிகளை வழங்கும் நாட் டின் முதல் மாவட்டமாக கேரளாவில் உள்ள வயநாடு திகழ்கிறது. வயநாடு மாவட்ட நிர்வாகம் ஆவண டிஜிட்டல் மயமாக்கலுக்கான அக்ஷயா பிக் பிரச்சாரத்தின் ஒரு பகு தியாக 64,670 பழங்குடியின பயனாளி களுக்கு 1,42,563 சேவைகளை வழங்கி சாதனை படைத்துள்ளது. இதில் 15,796 குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு களும், 31,252 பேருக்கு ஆதார் அட்டை களும், 11,300 பேருக்கு பிறப்புச் சான்றி தழ்களும், 22,488 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகளும், 22,888 பேருக்கு டிஜிட்டல் லாக்கர் வசதியும் இந்த பிரச்சாரத்தின் மூலம் வழங்கப்பட்டுள் ளது. இந்த இயக்கம் நவம்பர் 2021 இல் தொண்டர்நாடு கிராம பஞ்சாயத்தில் தொடங்கப்பட்டது. அனைத்து துறைகளும் இந்த முகாமின் கீழ் கொண்டு வரப்படுவதால், ஒவ்வொரு பயனாளியும் முகாமி லேயே தேவையான அனைத்து சேவை களையும் பெறுகிறார்கள், பல அலுவ லகங்களுக்குச் செல்வதற்கான நேரத் தையும் முயற்சியையும் மிச்சப்படுத்து கிறார்கள் என்று வயநாடு துணை ஆட்சியர். ஆர்.ஸ்ரீலட்சுமி தெரிவித்தார். இவை தவிர, வருமானச் சான்றிதழ், உரிமைச் சான்றிதழ், வயதுச் சான்றி தழ், புதிய ஓய்வூதியத்திற்கான விண் ணப்பங்கள் போன்ற இதர சேவைகளும் வழங்கப்படுகின்றன என்று இத்திட் டத்தின் பொறுப்பு (நோடல்) அதிகாரி யான ஸ்ரீலக்ஷ்மி தெரிவித்தார்.