சென்னை, அக். 26- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் காலம் சென்ற ப.மாணிக்கம் 100ஆவது பிறந்தநாள் நிறைவு நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் புதனன்று (அக். 26) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில துணைச் செயலாளர் மூ.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மூத்த தலை வர் இரா.நல்லகண்ணு ப.மாணிக்கம் உருவப்படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி பேசுகை யில், கும்பகோணம் அருகே உள்ள கிராமத்தில் பிறந்த அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றார். தோழர் கே.பாலதண்டாயு தம், மார்க்சிய சிந்தனையாளர் சுப்ர மணிய சர்மா போன்றோரின் தொடர் பால் மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டார்.இடதுசாரி சிந்த னைகளோடு பல்கலைக்கழகத்தில் மாணவர் மன்றம் செயல்பட்டது.
அவரது மாணவர் மன்ற செயல் பாட்டால் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். புதுச்சேரியில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் வ.சுப்பையா ஆகியோரின் போராட்டங்கள் ப.மாணிக்கத்தின் சிந்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. பல்வேறு மாணவர் இளைஞர் போராட்டங்க ளில் பங்கேற்றார். மாணவர் பெரு மன்றத்தின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டார். மார்க்சிய கொள்கை வழி நின்று உறுதியாக செயல்பட்டார். மதுரை மற்றும் நெல்லை சதி வழக்கு களில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். கட்சி தடை செய்யப்பட்ட போது 2 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். கட்சியின் மாநிலச் செயலாளராக 15 ஆண்டுகள் செயல்பட்டார். தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பி னராகவும் சிறப்பாக செயல்பட்டார் என புகழாரம் சூட்டினார். இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் வகிதா நிஜாம், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திர நாத், மாநிலக்குழு உறுப்பினர்கள் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, முரளி, த.லெ னின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.