tamilnadu

img

தஞ்சாவூரில் 25 ஆயிரம் ஏக்கர் நெல், கடலைப் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு

தஞ்சாவூர், டிச.15 -  தஞ்சை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையினால் நடவு செய்த  வயல்களில் தண்ணீர் கடல் போல  தேங்கிக் கிடக்கிறது. 25 ஆயிரம் ஏக்கர் நெல் மற்றும் கடலை உள்ளிட்ட  பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை வங்கக்கடலில் உருவான குறைந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்ற ழுத்த தாழ்வு பகுதியாக மாறியதால், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித் திருந்தது. அதன்படி கடந்த 3 நாட்களாக தஞ்சை மாவட்டம் முழு வதும் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த இந்த மழையால் சம்பா, தாளடி  நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. ஏற்கனவே கடந்த வாரத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டு தப்பிய நிலையில், தற்போதைய மழை யால் முழுமையாக நீரில் மூழ்கி உள்ளன. தண்ணீர் வடிய வழியில்லாத தால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரி வித்துள்ளனர். நெற்பயிர்கள் நீரில் மூழ்கின மாவட்டத்தில் வல்லுண்டாம்பட்டு, நெய்வாசல் தென்பாதி, மெலட்டூர், தென்கொண்டார் இருப்பு, நரசிங்க மங்கலம், அம்மாப்பேடடை, புத்தூர், சாலியமங்கலம், குலமங்கலம், சமை யன்குடிகாடு, ஒக்கநாடு மேலையூர்,  செண்பகபுரம், சடையார்கோவில், ஆர்சுத்திப்பட்டு, நாத்தேவன் குடிக்காடு, தொண்டாதோப்பு, சின்ன பொன்னாப்பூர், தலையாமங்கலம், நெய்வாசல், ஒரத்தநாடு, திருப்பழனம், சிறு புலியூர், ராயன்பேட்டை, கார்குடி, பருத்திகுடி, திங்களூர், 70.பெரமூர், தென்னஞ்சேரி, குண்டக்குடி, ஆச்சனூர் ஆகிய கிராமங்களில் விவ சாயிகளின் இளம் சம்பா, தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இப்பகுதியில் பெய்த கனமழை யால் மழைநீர் வயல்களில் கடல்போல்  தேங்கியுள்ளது. இந்த பகுதிகளில் மட்டும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் கள் மற்றும் கடலை உள்ளிட்ட தோட்டக் கலை பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளன. அழுகும் அபாயம் நடவு செய்யப்பட்டு 20 நாட்களுக்கு  மேல் ஆகிய நிலையில், இந்தப் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இந்த பகுதிகளில் வடிகால் வாய்க்கால் களை முறையாக தூர்வாராததால் தண்ணீர் வடியாமல் வயல்களில் தேங்கி யது. தண்ணீர் வடிவதற்கு தாமதம் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ள தாக விவசாயிகள் வேதனை தெரிவித் துள்ளனர். உரிய நிவாரணம் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட ஆட்சியர், வேளாண்மைத் துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து, உரிய நிவாரணத்தை அரசி டம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் தண்ணீர் வடிய வழியில்லா மல் உள்ள நிலையில் மழை தொடர்ந்த தால் சம்பா, தாளடி சாகுபடி முழுமை யாக பாதிக்கப்படும். இதனால் ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ள விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். எனவே விவசா யிகளின் நலன்கருதி உடனே நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.