‘போதையற்ற தமிழ்நாடு’ எனும் முழக்கத்தை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பா.லெனின், மாவட்டச் செயலாளர் ரெ.சேதுபதி, பொருளாளர் நவநீதிகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலையில் இதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தார். வாலிபர் சங்கத்தின் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டார். சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், செயலாளர். ஏ.வி.சிங்காரவேலன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.