மதுரை, ஜூன் 15- மூக்கைச் சிந்துவதும், தினம் தோறும் குளிப்பதும் கொரோனா தொற்று பரவலிலிருந்து ஒருவரைக் காப்பாற்றும் என்கின்றனர் மருத்து வர்கள். கொரோனா வைரஸை ஜப்பான் கட்டுக்குள் கொண்டுவந்தது குறித்துப் பேசிய மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர், “நாம் தும்மும் போது ஏற்படும் நீர் திவலைகள் 50 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. அது நமக்குப் பரவினால். மூக்கில் போய் தங்கிவிடும். பொதுவாக ஜப்பா னியர்கள் தினம் தோறும் மூக்கைச் சிந்தும் பழக்கம் உள்ளவர்கள். ஆத லால் அவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு மிகக்குறைவு. அதனால் அவர்கள் அதை எளிதில் கட்டுக்குள் கொண்டுவருகிறார்கள் என்றார். கேரளாவில் கட்டுப்படுத்தும் முறை பற்றிக்கூறிய ஒரு மருத்துவர், “கேர ளத்தில் சிறிய குழந்தைகள் தொடங்கி பள்ளி மாணவர்கள் வரை தினம் தோறும் குளித்து விட்டு வெளியே வருவார்கள். குளிப்பதன் மூலம் உடல் தூய்மைய டைகிறது. உடல் தூய்மையும் தொற்று பரவலைத் தடுக்கும். மதுரையில் கொரோனா தொற்று அறிகுறியுடன் கோரிப்பாளையத் தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். முப்பது நாட்கள் தங்கியுள்ளார்.
அவருக்கு 60 நிமிடம் x 60 X24 X26 என்ற அளவிற்கு ஆக்சிஜனை செலுத்தி மதுரை மருத்து வமனை காப்பாறி சாதனை படைத் துள்ளது. மதுரையில் கொரோனா நோயாளி களுக்கென சுமார் 1,200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவில் நோயாளி கள் எவரும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை யை விட கூடுதலான பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன. (சீமாங் சிகிச்சை வசதி மதுரையில் உள்ளது குறிப்பிடத்தக் கது) மற்றொரு மருத்துவரிடம் பேசுகை யில், மதுரையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர் கள் முகக் கவசம் அணிவதில்லை. கூட்டம் அதிகமாகக் கூடுகிறது.
மது ரையில் கட்டுப்பாட்டை தளர்த்துவ தில் எச்சரிக்கை தேவை என்றார். மதுரை தத்தனேரியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவனையில் உள்ள 200 படுக்கைகளை கொரோனா வார்டாக மாற்றித்தரவேண்டுமென மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டிருக்கிறது. துறை ரீதியாக பேசவேண்டும். இஎஸ்ஐ ஒரு தனி கார்ப்பரேஷன் என்ற சொத்தைக் கார ணங்களைக் கூறி இந்தத் திட்டத்திற்கு சிலர் முட்டுக்கட்டை போட்டு வருகின்ற னர். மதுரை மக்கள் காப்பாற்றப்பட இஎஸ்ஐ மருத்துவமனையில் 200 படுக்கைகளை கொரோனா வார்டாக மாற்றுவது ஒன்றும் தவறல்ல. தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டு மென்கின்றது மருத்துவமனை வட்டா ரம். மருத்துவர்கள், தன்னார்வலர்களி டம் பேசியபோது, கொரோனா பரவ லில் மதுரை “கட்டுப்பாடற்ற நகரமாக” மாறிவிட்டது. தளர்வு என்ற பெயரில் எல்லை மீறப்பட்டுவிட்டது. மதுரை நகரை கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்தால் மட்டுமே கொரோனா வேகத்தை தணிக்க முடியுமென்கின்றனர்.