மதுரை, ஜூலை 2- கொரோனா மூன்று அல்லது நான்கு மாதங்கள் உச்சத்தைத் தொட்டுதான் படிப் படியாக குறையும் என மருத்துவ வல்லுநர் கள் கூறியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற் றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை ஆர்.பி.உதயகுமார் வியாழனன்று செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இதுவரை பாதிக்கப்பட்ட வர்கள் 2,858 பேர்களில் 874 பேர் குணம டைந்து அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 1949 போ சிகிச்சையில் உள்ளனர். அடிப்படை வசதியை பொறுத்த வரையில் அரசு இராஜாஜி மருத்துவமனை 1400ம், மற்ற அரசு மருத்துவமனைகளில் 708ம், தனியார் மருத்துவமனைகளில் 260ம், கோவிட்-19 கேர் சென்டர்களில் 2780 என மொத்தம் 5148 படுக்கைகள் தயார் நிலை யில் உள்ளது. அதில் 1,949 படுக்கைகள் பயன்பாட்டிலும், 3199 படுக்கைகள் தயார் நிலையிலும் உள்ளன. இப்பணியில் 923 மருத்துவர்களும், 1075 செவிலியர்களும், 2900 களப்பணியாளர்களும் உள்ளனர். 40 பேர் இறந்துள்ளனர். தாலுகாவில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதி இருக்க தனி கவனம் செலுத்தப்பட்டுள் ளது. பொதுவாகவே மூன்று அல்லது நான்கு மாதங்கள் இந்நோய் உச்சத்தைத் தொட்டு தான் படிபடியாக குறையும் என மருத்துவ வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள். விரை வில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக மதுரை மாறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். இந்த நிலை யில், வியாழனன்று 273 பேர் தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.