tamilnadu

img

50 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் செயல்பட்டு வந்த ஜவுளிக்கடையில் தீ விபத்து... தீயைணப்பு வீரர்கள் இருவர் பலி; இருவர் காயம்

மதுரை:
தீபாவளியன்று அதிகாலை(சனிக்கிழமை) 2,30 மணியளவில் மதுரை தெற்குவாசல் நவபத்கானா தெருவிலுள்ள சஞ்சய் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்துமதுரை மீனாட்சி அம்மன்கோவில், மதுரை நகர் மற்றும்அனுப்பானடி நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள்சென்று, தீயை அணைக்கும்பணியில் ஈடுபட்டனர். தீபாவளிக்கு துணி பார்சல்கள்நிறைய வைக்கப்பட்டிருந்ததால், தீ மளமளவென வேகமாகப் பரவியது. தரை தளத் தில் பற்றிய தீ மிக விரைவில் முதல் தளத்திற்கும் பரவியது.முதல் தளத்தில் பற்றிய தீயைஅணைக்க ஏணிகளைப் பயன்படுத்தி தீயை  அணைத்துள்ளனர்.

யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென கட்டடம் பெரும்சத்தத்துடன் இடிந்து விழுந் தது. இதில் கட்டத்தின் இடிபாடுகளில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி (30), சிவராஜன் (36) இறந்தனர். மேலும் கல்யாண குமார்(30), சின்னகருப்பு(30) ஆகியோர் பலத்த காயத்துடன்மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். தீவிபத்தில் உயிரிழந்த இரண்டு வீரர்களின் குடும்பத் திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், முதல்வர்பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சமும், அரசு நிதியில் இருந்து ரூ.15 லட்சமும் வழங்கப்படும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவழங்கப்படும். காயமடைந்தவீரர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதுடன், அவர்களின் மருத்துவச் செலவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள் ளார்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் உடல்கள் உடற்கூராய்விற்குப் பின் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை டிஜிபி ஜாபர்சேட் உயிரிழந்தவர்கள் உடலுக்கு மாலையணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு வீரர்களை சந்தித்துவிரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்ததோடு அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார்.தென்மண்டல இணைஇயக்குனர் சரவணக்குமார், மாவட்ட அதிகாரி கல்யாண் குமார், மாவட்ட ஆட்சயர் அன்பழகன், மாநகர் காவல் ஆணையர்  பிரேம் ஆனந்த் சின்ஹா, தீயணைப்புத் துறைஊழியர்கள் வீர மரணமடைந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சிவராஜனின் உடல் அவரதுசொந்த ஊரான செக்கானுரணிக்கும், கிருஷ்ணமூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டன.

சிபிஎம் அஞ்சலி
மறைந்த தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி. சிவாஜன் உடல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் இரா. விஜயராஜன், மத்திய பகுதிக் குழுசெயலாளர் பி. ஜீவா,  எம்.பாரதி  ராஜேந்திரன், மாரியப்பன் உள்ளிட்டோர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.விபத்து குறித்து மாவட்டதீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார் கூறுகையில், “தீயணைப்பு வீரர்கள் கட்டிடங்களில் ஏறி,  தீ எங்கிருந்துபற்றியது என்பதைக் கண்டுபிடிப்பது வழக்கம். ஆனால், இந்த கட்டடம்  மெட்ராஸ் வடிவகூரை அமைப்பைக் கொண்டிருந்தது. 50 ஆண்டுகள் பழமையான கட்டம் என்றார். 

மற்றொரு விபத்து
மதுரை  மஞ்சனக்காரத் தெருவில் (இரண்டாவது தெரு) ஏ.கே‌ .அகமத் நிறுவனத்தின்  குடோனில் சனிக் கிழமை  தீ விபத்து ஏற்பட்டது.  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் நான்கு மணி நேரபோராட்டத்திற்குப் பிறகு தீயைஅணைத்தனர்.