tamilnadu

img

வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு முறைகேடான வசூல்: தர்மபுரம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஆக.7- தர்மபுரம் ஊராட்சியில் வீட்டுக் குடிநீர் இணைப்புக் காக பொதுமக்களிடமிருந்து ரசீது இல்லாமல் முறை கேடாக பல்லாயிரக் கணக்கில் ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவி மற்றும் செயலாளர் மீது சட்டரீதி யிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். வசூல் செய்த தொகையை முழுமையாக திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று  பழவிளை இராஜாக்க மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத் துக்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக ஒன்றிய கழக செயலா ளர் ஏ.லிவிங்ஸ்டன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி யின் கிழக்கு வட்டார தலைவர் எஸ்.ஏ.பி.அசோகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.டி.ராஜகுமார், விசிக ஒன்றிய செயலாளர் திரு மாசெந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன், சேரலாதன் ஆகியோர் பேசினர். பின்னர் ஒன்றிய அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.