திருவட்டார் ஊரக வளர்ச்சி வங்கிக்கு இயக்குநர்களாக சிபிஎம்லிருந்து இருவர் தேர்வு
திருவட்டார், ஜுன் 16- நீதிமன்ற தடை நீங்கியதை தொடர்ந்து திருவட்டார் ஊரக வளர்ச்சி வங்கி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சிபிஎம் சார்பில் போட்டி யிட்ட 2 இயக்குநர்கள் வெற்றி பெற்றனர். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊரக வளர்ச்சி வங்கியின் இயக்குநர்களுக்கான தேர்தலில் பதிவான வாக்கு களை எண்ணி முடிவுகளை அறிவிக்க நீதிமன்றம் தடை விதித்தி ருந்தது. இந்த தடை நீங்கியதை தொடர்ந்து வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 2 இடங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜே. சீதீஷ், வேலம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர் களுக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ் வாழ்த்து தெரிவித்தார்.
44 மாத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்குக!
திருநெல்வேலி. ஜூன் 16- நெல்லையில் தமிழ்நாடு அரசு ஒய்வு பெற்ற போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் (ரேவா) மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் பி.மனோகரன் தலைமை தாங்கினார். மாநில முடிவுகள் குறித்து சங்க மாவட்ட பொது செயலாளர் பி.முத்துகிருஷ்னன் பேசினார். கூட்டத்தில் 2018 மார்ச் முதல் ஜூன் வரை 44 மாத அக விலை படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். 2018 ஏப்ரல் முதல் 2019 ஜூன் முடிய ஒய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை, வைப்புநிதி, விடுப்பு சம்பளம், ஒப்படைப்பு தொகை என ரூ.3ஆயிரம் கோடியை உடனடியாக வழங்கிட வேண்டும், மருத்துவ காப்பீட்டை அமல்படுத்திட வேண்டும், இறப்பு நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி மாலை 3 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. நிர்வாகக் குழு கூட்டத்தில் நிர்வாகிகள் எட்டப்பன், இ.எம். பழனி, ராமையா, எஸ்.முத்துக்கிருஷ்ணன் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
பீடித் தொழிலாளிக்கு மாத ஓய்வூதியம் ரூ.3ஆயிரம் வழங்க வேண்டும்
திருநெல்வேலி, ஜூன் 16- நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு பீடித்தொழிலாளர் சங்கம் கீழப்பாவூர் வட்டார ஆண்டு பேரவை கூட்டம் வட்டார தலை வர் கற்பகவல்லி தலைமையில் நடைபெற்றது. சங்க வட்டார செயலாளர் ஆரியமுல்லை வேலை அறிக்கையை சமர்ப் பித்தார். சி.பிஎம் ஒன்றிய செயலாளர் தங்கம், பீடிதொழி லாளர் சங்க மாவட்ட துணை தலைவர் தர்மக்கனி ,ஒன்றிய பொருளாளர் கருப்பசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்க மாவட்ட பொது செயலாளர் எம்.வேல்முருகன் நிறை வுரையாற்றினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். வட்டார தலைவராக கற்பகவல்லி, துணைத் தலைவர்களாக ஐயாத்துரை, தர்மக்கனி,பொட்டுசெல்வம், செயலாளராக ஆரியமுல்லை, துணை செயலாளராக சுமித்ரா,பன்னீர்செல்வம்,கலா,திருமலைவடிவு, பொருளாளராக கருப்பசாமி உட்பட 12 இடைக்கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், பீடித் தொழிலாளிக்கு 6 நாள் முழு வேலை வழங்கிட வேண்டும்,1000 பீடி சுற்ற தரமான இலை வழங்க வேண்டும் ,பீடி தொழிலாளிக்கு மாத ஓய்வூதியம் ரூ.3ஆயிரம் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கடல் அலையில் சிக்கிய சிறுவர்களில் இருவர் மாயம், ஒருவர் பலி
நாகர்கோவில், ஜூன் 16- குமரி மாவட்டம், மண்டைக்காடு புதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த ஆரோக்கிய ரெக்சின் (11), சகாயரெகின் (12), ரெஜித் (12), சச்சின் (14) ஆகிய நான்கு சிறுவர்கள், அப்பகுதி கடற்கரை யில் ஞாயிறன்று விளையாடி கொண்டிருந்தனர். இதில் சிறுவர்கள் விளையாடிய பந்து கடலில் விழுந்தது. இதை எடுக்க 4 பேரும் கடலுக்குள் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக, கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி, நான்கு பேரும் கூச்சலிட்டனர். சிறுவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மீன வர்கள், கடலுக்குள் குதித்து சச்சின் என்ற சிறுவனை சடலமாக வும், ஆரோக்கிய ரெக்சினை உயிருக்கு ஆபத்தான நிலை யிலும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சகாயரெகின், ரெஜித் ஆகிய இருவரும் கடல் அலையில் சிக்கி மாயமாகினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குளச்சல் கடலோர காவல் படையினர், சச்சின் சடலத்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மீனவர்கள் உதவியுடன் படகு கள் மூலம் கடலில் மாயமான இரு சிறுவர்களை தேடி வரு கின்றனர். தகவலறிந்து மாயமான இரு சிறுவர்களின் உறவினர்கள் கடற்கரையில் கதறி அழுத சம்பவம் அப்பகுதி மீனவ கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
நகை பட்டறை உரிமையாளர் தற்கொலை
நாகர்கோவில், ஜூன் 16- குமரி மாவட்டம், நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் பகுதி யைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (57). இவர், மீனாட்சி புரத்தில் நகை பட்டறை வைத்து, நகைகளில் கல் பதிக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீ ரென மாயமானார். இதையடுத்து உறவினர்கள் தேடி வந்த நிலையில், சனி யன்று மீண்டும் வீட்டுக்கு வந்த சுப்பிரமணியன், வீட்டில் இருந்தவர்களிடம் பட்டறைக்கு செல்வதாக கூறி சென்றார். இரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், ஞாயிறன்று காலையில் உறவினர்கள் பட்டறைக்கு சென்று பார்த்தனர். அப்போது பட்டறையின் கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சுப்பிரமணியன் தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சி யடைந்த உறவினர்கள் கோட்டாறு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சுப்பிரமணியன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. கோட்டாறு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.