tamilnadu

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போராடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக!

 அரசுக்கு விவசாயிகள் சங்கம்  கோரிக்கை 

சென்னை,அக்.18- ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்டு போராடி வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாது காத்திட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தற்பொழுது தமிழகத்தில் ஒன்றிய அரசாங் கத்தின் பவர் கிரீட் நிறுவனத்தின் மூலமும், மாநில அரசாங்கத்தின் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு  கழகம் மூலமும் 120-க்கும் மேற்பட்ட உயர்மின் கோபுர திட்டங்கள் விவசாய விளை நிலங்களின்  வழியாக கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட் டுள்ளது. தற்போது 30க்கும் மேற்பட்ட திட்டங்கள் விவசாய  விளை நிலங்களின் வழியாக மின் கோ புரங்கள் அமைத்து கொண்டுசெல்லப்பட்டு உள்ளது. ஒரு பகுதி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டும் மீதி திட்டங்கள் அமலாக்கத்திலும் உள்ளன. விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதால் விவசாயிகளின் நிலம் துண்டாடப்படுகிறது. மின்பாதையை ஒட்டிய  இடங்களில் கிணறு, போர்வெல், கட்டிடங்கள் போன்ற கட்டுமான பணிகளை செய்ய முடியாது. மரம் உள்ளிட்ட பயிர்கள் வளர்க்க முடியாது, உடல் சுகாதாரம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. நிலத்தினுடைய மதிப்பு வீழ்ச்சி அடைகிறது.

நிலத்தின் பெயரில் வங்கிகளில் கடன் பெற முடியாத நிலை உருவாகிறது போன்ற பல்வேறு காரணங்களால் மின் பாதை அமைக் கப்படும் விவசாயிகளின் நில உரிமையாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருப்பூர் மாவட்டம் புகலூர் முதல் திருவளம் வரை செல்லும் உயர் மின் கோபுர திட்டமும் அரியலூர் முதல் திரு வளம் வரை செல்லும் உயர்மின் கோபுர திட்ட மும், பவர் கிரிட் மூலமும் தமிழ்நாடு மின் தொட ரமைப்பு கழகத்தின் மூலமும் அமல்படுத்தப் பட்டுள்ளது. இதில் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்ட சூழலில் அவர்களுக்கு வழங்க வேண்டிய மரம், பயிர் நிலத்திற்கான சேதாரம் கிணறு, போர்வெல், கட்டுமானங்கள் மற்றும் நில மதிப்பு வீழ்ச்சிக்கான இழப்பீடு என்பது உரிய முறையில் வழங்கப்படவில்லை. இதனை வலியுறுத்தி உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாய சங்கங்கள் மற்றும் பய னாளிகள், தொடர்ச்சியாக பலமுறை மாவட்ட ஆட்சியரின் குறை தீர்ப்பு கூட்டத்திலும், நேரடி யாக பயனாளிகளை அழைத்துச் சென்று தனிப் பட்ட முறையில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மனுக்கள் மூலமாகவும் 500-க்கு மேற்பட்ட தனிப்பட்ட மனுக்கள் அளித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளி டம் நேரடியாக முறையிட்டுள்ளனர்.

திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியர் அலட்சியம்

கடந்த 29.10.2022 அன்று அரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான பி.டெல்லிபாபு உள்ளிட்டு தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பயனாளிகள்  மின்சாரத்துறை அமைச்சரை சென் னையில் சென்று சந்தித்து நேரடியாக முறை யிட்டுள்ளனர். இச்சூழலில் எந்தவிதமான நடவ டிக்கையும் மாவட்ட நிர்வாகத்தால் மேற் கொள்ளப்படாத சூழலில் கடந்த 13.10.2022 முதல் தொடர்ச்சியாக பாதிக்கப் பட்டிருக்கக் கூடிய விவசாயிகள் ஆற்காடு தாலுகா பரதராமி ஊரில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியரிடம் அழைப்பு பெறப்பட்டு பவர் கிரிட் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தங்களுடைய நியாயமான கோரிக் கைகளை விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முன் வைத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் மேற்கண்ட 2 மின் கோபுர திட்டங்கள் அமைக்கப்பட்டு அந்த மாவட்டத்தின் வழி யாகவே ராணிப்பேட்டை மாவட்டத்தின் வழியா கவும் திட்டம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆகவே ஏற்கனவே திருவண்ணாமலை மாவட் டத்தில் இத்திட்டங்களுக்காக எத்தகைய இழப்பீடுகள் வழங்கப்பட்டதோ அதுபோன்று இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோ ரிக்கையும் முன்வைத்து, மாவட்ட ஆட்சியர் முன்நிலையில் அக்டோபர் 17 அன்று நடை பெற்ற 3 மணி நேரம் பேச்சுவார்த்தையில் விவ சாயிகளின் நியாயமான போராட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் சரியான பதில் அளிக்காமல், முடிவு எடுக்காமல் ஒரு தலைப்பட்சமாக பேசியதுடன் உங்களை அழைத் துப் பேசுவது கட்டாயத்தின் பெயரில் அல்ல, பிரச் சனைக்கு தீர்வுகாண ஒருவாரம் ஆகலாம். நீங்கள் வேண்டுமானால் அதுவரை ஒரு வாரம் பத்து நாட்கள் கூட போராடலாம் என்று அலட்சி யப்படுத்தியதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலக்குழு கடும் கண்டனத்தை தெரி விக்கிறது.  விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு முறையான உத்தரவாதம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து போராட் டக்குழு தலைவர்கள் வெளியேறினர். உரிய  தீர்வு கிடைக்கப்படாத சூழலில் தொடர்ந்து விவ சாயிகள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவருடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்திட ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்  தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் மின்வாரியத் தின் மூலம் என்ன இழப்பீடு வழங்கப்பட்டிருக் கிறது என்பதனை பெற்றுத் தர வேண்டும். திரு வண்ணாமலை மாவட்டத்தில் போடப்பட்டது போல மின்வாரியத்தின் மூலம் கிடைக்கப்பட வேண்டிய அல்லது கொடுக்கப்பட வேண்டிய இழப்பீடுகள் குறித்து தனி வழிகாட்டுதல் நிலம், பயிர் மரத்திற்கான வழிகாட்டுதல் என்பது தனி யாக வெளியிடப்பட வேண்டும். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மின் பாதை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட கிணறு, போர்வெல் போன்றவற்றிற்கு இழப்பீடு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கிணற்றுக்கு நான்கு லட்சமும், போர்வெலுக்கு இரண்டு லட்சம் என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது, மேற்கண்ட இழப்பீடு அதே திட்டம் அம லாக்கப் படக்கூடிய ராணிப்பேட்டையிலும் கொடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் நிலத்திற்கான இழப்பீட்டை கோவை மாவட்ட ஆட்சியர் தீர்மா னித்தது போல உயர்மின் கோபுர பாதை செல்லக் கூடிய வருவாய் கிராமத்தில் எந்த நிலத்தினு டைய மதிப்பு கூடுதலாக இருக்கிறதோ அதை வருவாய் கிராமத்தின் முழுவதற்கும் மொத்த மான பொதுவான இழப்பீடு தொகையை தீர்மா னித்து அரசு நிர்ணய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாறாக நீளவாக்கீட்டு முறையில் வழிகாட்டு மதிப்பீட்டை எடுத்து குறைவான நில மதிப்பு வீழ்ச்சிக்கான தொகை தீர்மானிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட இதர கோரிக்கைகளோடு விவசாயிகள் போராடி வரும் நேரத்தில் ஒன்றிய , மாநில அரசுகள் மாவட்ட நிர்வாகம் உரிய தலையீடு செய்து உடனடி யாக விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.