tamilnadu

img

சட்டவிரோதமாக அள்ளப்படும் மணல் :அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை:
இராமநாதபும் ஆர்.எஸ்.மங்கலத்தில்உபரி மண் அள்ள உரிமம் பெற்றுக் கொண்டு, கோட்டைக்கரை ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன்,பி.புகழேந்தி அமர்வில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது தொடர்பான புகைப்படங்கள் தாக்கல் செய்யப் பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட புகைப்படங்களை பார்க்கும்போதுஐந்து முதல் பத்து அடி ஆழம் வரைதோண்டப் பட்டு மணல் அள்ளப்பட்டுள்ளதுதெரிகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்ய வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன்வழக்கறிஞர் ஆணையராக நியமிக்கப் படுகிறார்.அவர், உபரி மண் அள்ள உரிமம் பெற்றஇடத்தில் ஆய்வு நடத்தி, பட்டா நிலத்தில்உபரி மண் அள்ள அனுமதி பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளதா? அந்த மண் எந்த வகையானது?கோட்டைக்கரை ஆற்றில் மணல் அள்ளப்பட்டுள்ளதா? உரிமம் பெற்ற இடத்திலிருந்து ஆறு எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது? என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.கடந்த ஐந்தாண்டுகளில் சவடு, மண்உபரி மண் அள்ள எத்தனைஉரிமங்கள்/ குத்தகை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆண்டு வாரியாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை நவம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.