திருச்சிராப்பள்ளி, ஜூலை 26- திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் பொது மருத்து வம், இருதய சிகிச்சை, மூளை நரம்பி யல், சிறுநீரகவியல், குழந்தைகள் அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மகப்பேறு, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, பச்சிளங்குழந்தை கள் சிகிச்சை, குடல் சிகிச்சை, புற்று நோய் சிகிச்சை, கண், பல் சிகிச்சை, சித்தா, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவம் உள்ளிட்ட 32-க்கும் மேற் பட்ட சிகிச்சை பிரிவுகள் இயங்கி வரு கின்றன. இம்மருத்துவமனையில் அரிய லூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப் பட்டினம், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், நாள்தோ றும் 4000-க்கும் மேற்பட்டோர் வெளிநோ யாளிகளாகவும் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவு கட்டிட வளாகம் 7 தளங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் தரைத்தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, ஸ்கேன் பிரிவு, முதல் தளத்தில் இருதயவியல் துறை, 2 ஆம் தளத்தில் மூளை நரம்பியல் துறை, 3 ஆம் தளத் தில் சிறுநீரகவியல் துறை, 4 ஆம் தளத் தில் தோல் மருத்துவப் பிரிவு, 5 ஆம் தளத்தில் பொது மருத்துவ பிரிவு, 6 ஆம் தளத்தில் முடநீக்கியல் துறையும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு உள்ள உள் நோயாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் கழிப்பறையை தூய்மையாக பராமரிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 5 நாள் தொடர் போராட்டம் நடை பெற்றது. இதையடுத்து இந்த கட்டிடத் தின் அனைத்து தளங்களிலும் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரப் பட்டது. கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த இரண்டு தினங் களுக்கு முன் தரைத்தளத்தில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவருக்கு முதலுவி செய்யும் வகையில் அங்குள்ள ஒருவர் அவருக்கு தண்ணீர் கொடுக்க நினைத்து குடிதண்ணீர் தேடி தரைத்தளம் மற்றும் 2 தளங்கள் வரை அலைந்துள்ளார். ஆனால் அவருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
குடிநீர் கிடைப்பதில்லை
இதுகுறித்து அவர் தீக்கதிர் செய்தியாளரிடம் தெரிவித்தார். இதை யடுத்து அரசு மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறுகையில், “கடந்த இரண்டு தினங்களாக 3 மற்றும் 4 ஆவது தளத்தில் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வருகிறது. மற்ற தளங்களில் குடி நீர் வருவதில்லை. நாங்கள் மருத்துவ மனைக்கு வெளியே உள்ள டீக்கடை யில்தான் குடிநீர் மற்றும் சுடுதண்ணீர் பெற்று வருகிறோம். மேலும் ஒரு சில கழிப்பறை குழாய்களில் கடந்த 2 தினங்களாக சரி வர தண்ணீர் வருவது இல்லை. கழிப்ப றைகளில் உள்ள வாஷ்பேஷன்களில் குழாய்கள் கிடையாது. 4 லிப்ட்களில், இரண்டு லிப்ட்கள் செயல்படாததால் தரை தளத்தில் இருந்து மற்ற தளங் களுக்கு செல்ல நோயாளிகள் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது” என்றனர்.
புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை
இதுகுறித்து மருத்துவமனை டீன் மருத்துவர் அர்ஷியாபேகத்தை சந்தித்த போது அவர் கூறியதாவது: மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிக்கு சிறந்த சிகிச்சையுடன் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கி வருகிறோம். இம்மருத்துவமனை வளாகத்தில் உள்நோயாளிகளுக்கு 20 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மகப்பேறு பிரி வில் சுடுதண்ணீருக்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. விபத்து மற்றும் அவசரச் சிகிச் சைக்கு வரும் நோயாளிகளுடன் குறைந் தது 4 உதவியாளர்கள் வருகின்றனர். அவர்களின் மனநிலையை புரிந்து மருத் துவமனையில் அனுமதிக்கிறோம். அதேவேளையில் உதவியாளர் களுக்கு என தனியாக குடிநீர் வசதி செய்து கொடுத்திருந்தாலும் அவர்கள் உள்நோயாளிகள் பயன்படுத்தும் குடி நீர் மற்றும் கழிப்பறைகளை பயன்ப டுத்துவதால் சில நேரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. பொதுமக்களின் குறைகளை தெரிந்து கொள்ள புகார் பெட்டி வைக்கப் பட்டுள்ளது. அதில் வரும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படு கிறது. இங்குள்ள அனைத்து தளங்களி லும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்ப டும். அதே நேரம் நோயாளியின் உதவி யாளர்கள் மருத்துவமனையை சுகாதா ரம் மற்றும் சுத்தமாக பராமரிக்க உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.