அரசுப் பள்ளிகளை தேடிவந்தால் சிறப்பான கல்வி கிடைக்கும்: அமைச்சர்
“ 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வரும் 12ஆம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் படிக்கும் வயதுள்ள மாணவர்கள் வேறு வழியில் சென்று விடக் கூடாது என்று தான் ஒவ்வொரு திட்டமும் செயல்பட்டு வருகிறது” என்றார். குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை. அரசு சார்பில் உயர்கல்வி வழிகாட்டிக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டு களில் தேர்ச்சி விழுக்காட்டை இன்னும் அதிகரிக்க முயற்சி எடுப்போம். இது ஜனநாயக நாடு யார் எந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. அரசு பள்ளிகளை தேடி வருபவர்களுக்கு நாங்கள் சிறந்த படிப்பு கொடுக்க முயற்சி எடுப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சென்னை, மே9- தமிழ்நாட்டில் வெளியான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 32 ஆயிரத்து 501 மாணவர்கள் 100 மதிப்பெண் கள் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 2 பேர் 100 மதிப் பெண்கள் பெற்றுள்ள நிலை யில், ஆங்கிலத்தில் 15 பேர் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ள னர். இதேபோல், இயற்பியலில் 812 பேரும், வேதியியலில் 3 ஆயிரத்து 909 பேரும், உயிரியலில் ஆயிரத்து 494 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். அதேபோல், கணிதத்தில் 690 பேர், தாவரவியலில் 340 பேர், விலங்கியலில் 154 பேர், கணினி அறிவியலில் 4 ஆயி ரத்து 618 பேர் முழு 100 மதிப் பெண்களையும் பெற்றுள்ள னர். வணிகவியலில் 5 ஆயிரத்து 678 பேரும், கணக்கு பதிவியலில் 6 ஆயிரத்து 573 பேரும் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதேபோல், பொருளியலில் ஆயிரத்து 760 பேரும், கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் 4 ஆயிரத்து 51 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியல் பாடத்தில் ஆயிரத்து 334 பேரும் 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் வெளி யிடப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வில் நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மூன்றாம் பாலினத்தவரான ஸ்ரேயா என்ற மாணவி 337 மதிப் பெண்கள் எடுத்து தேர்வு பெற்றுள்ளார். அவர் தமிழ்ப் பாடத்தில் 62, ஆங்கிலம் 56, பொருளியல் 48, வணிகவியல் 54 , கணக்கு 59, கணினியில் 59 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய ஒரே நபரும் அவரே. குறிப்பாக சிறைவாசிகள் 90 பேர் தேர்வு எழுதினர். இதில், 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி87.78 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 4398 பேர் தேர்வு எழுதினர். இதில் 3923 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். தேர்ச்சி விழுக்காடு 89.20 ஆகும்.
துணைத் தேர்வு
இந்நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்க ளுக்கு ஜூன் 19 அன்று துணைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத 47,934 பேர் விண்ணப்பித்து, துணை தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளி யிடப்பட்டு, இந்த கல்வியாண்டி லேயே உயர்கல்வி தொடர லாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. துணை தேர்வுக ளுக்கான அட்டவணை செவ்வாயன்று வெளியிடப் படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மாணவர்கள் ஆலோசனை பெற
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 அன்று தொடங்கி ஏப்ரல் 3 அன்று முடிவடைந்தது. இந்த தேர்வு முடிவுகள் திங்களன்று (மே 8) வெளியானது. இந்நிலையில், திருவண் ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த ஹரி என்ற மாணவன் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் வீட்டின் இரண்டா வது மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தந்தை ராஜாமணி விவசாயி. மாண வனின் உடலை கைப்பற்றி தானிப்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர். இதனையடுத்து, மாண வர்கள் மனநல ஆலோசனை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.